ஆப்நகரம்

ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் முதலீடுகள் இவ்வளவா.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் முதலீடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 11 Dec 2022, 5:52 pm
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்தனர். எனினும், தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்பாகவே ஆப்கானிஸ்தானில் இந்தியா நிறைய முதலீடுகளை செய்துள்ளது.
Samayam Tamil india afghanistan
india afghanistan


இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா செய்துள்ள முதலீடுகள் பற்றியும், 2021ஆம் ஆண்டில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே கையெழுத்தான் ஒப்பந்தம் பற்றியும், எதிர்கால திட்டங்கள் பற்றிய விவரங்களையும் நாடாளுமன்றத்தில் குன்வார் தனிஷ் அலி எம்.பி கேள்வி எழுப்பினார்.

இதற்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் அளித்துள்ள பதிலில், ஆப்கானிஸ்தானில் இந்தியா 500க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களிலும் இந்தியா தனது திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது.

Gold investment: தங்கத்தில் இப்படியெல்லாம் முதலீடு செய்யலாமா.. லாபம் சம்பாதிக்க சூப்பர் ஐடியா!
இதில் மின்சாரம், குடிநீர் விநியோகம், சாலைப் போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியா 500க்கும் மேற்பட்ட திட்டங்களை செயலாக்கம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அரசு உறுதி அளித்த பெரும்பான்மையான திட்டங்கள் முடிக்கப்பட்டு ஆப்கானிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பு, நிறுவனங்கள், கல்வி, தொழிநுட்ப உதவி, இயற்கை வளங்களில் முதலீட்டை ஊக்குவிப்பது, ஆப்கானிஸ்தான் பொருட்களை இந்தியாவுக்கு வரி இல்லாமல் ஏற்றுமதி செய்ய அனுமதி ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.

இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே வரலாற்று தொடர்புகள் உள்ளன. ஆப்கன் மக்களுடன் இருக்கும் நமது சிறப்பு உறவாலும், ஐநா பாதுகாப்பு குழு தீர்மானத்தாலும் (2593) இந்தியா தொடர்ந்து ஆப்கானிஸ்தானை அணுகும். ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறோம்.

ஏற்கெனவே மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு 40,000 மில்லியன் டன் கோதுமை, 50 டன் மருந்துகள், 5 லட்சம் டன் கொரோனா தடுப்பூசிகள், குளிர் கால ஆடைகள், 28 டன் பேரிடர் நிவாரண உதவிகள் ஆகியவற்றை இந்தியா வழங்கியுள்ளது என அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்