புதிய இணையதளம்
ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக மத்திய அரசின் பென்சன் மற்றும் பென்சனர் நலத் துறை விரைவில் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இணையதளத்துக்கு பாவிஷ்யா (Bhavishya) என பெயரிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு
இந்த பாவிஷ்யா இணையதளத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) திறன் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஓய்வூதியதாரர்களுக்கு என்ன பயன்?
ஓய்வூதியதாரர்களுக்கு அலர்ட்
செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட பாவிஷ்யா இணையதளத்தில் இருந்து ஓய்வூதியதாரர்கள் மற்றும் பணி ஓய்வுபெறும் மூத்த குடிமக்களுக்கு தானாகவே அலர்ட் கொடுக்கப்படும் என மத்திய பென்சன் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியதாரர்களுடன் தொடர்பு
மேலும், பாவிஷ்யா இணையதளம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் எனவும், அவர்களின் கருத்துகள், ஆலோசனைகள், குறைகளை பெற்றுக்கொள்ளும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல்மயமாகும் பென்சன்
பென்சன் செயலாக்கம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் செலுத்துவதை டிஜிட்டல்மயமாக்குவதற்கு பாவிஷ்யா இணையதளம் பயன்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியதாரர்களுக்கு ஆலோசனை
இதுமட்டுமல்லாமல், பணி ஓய்வுபெறும் மூத்த குடிமக்களுக்கு பென்சன் குறித்து ஆலோசனை வழங்க அதிகாரிகள் தரப்பில் கருத்தரங்கள் நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பென்சன் பிரச்சினைகளுக்கு தீர்வு
பென்சன் செலுத்துவதில் வங்கிகள் தரப்பில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. புதிய இணையதளத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் தானாகவே சரிசெய்யப்படும் என அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.