ஆப்நகரம்

பென்சன் தொகை உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு!

குறைந்தபட்ச பென்சன் தொகை உயர்வு குறித்து மத்திய அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு.

Samayam Tamil 8 Jan 2022, 11:31 am
பென்சன் வாங்கும் நபர்களுக்கு விரைவில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) பயனாளிகளுக்கு விரைவில் குறைந்தபட்ச பென்சன் தொகை உயரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil pension


வரும் பிப்ரவரி மாதம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் குறைந்தபட்ச பென்சன் தொகை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. தொழிலாளர் பென்சன் திட்டத்தின் (Employees Pension Scheme) கீழ் குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்துவது பற்றி ஆலோசிப்பதுதான் இக்கூட்டத்தின் அஜெண்டா.

குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஏற்கெனவே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், குறைந்தபட்ச பென்சன் தொகை 1000 ரூபாயில் இருந்து 9000 ரூபாயாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் காருக்கு ரூ.1.5 லட்சம் சலுகை.. செம ஜாக்பாட்!!
இதுகுறித்து தொழிலாளர் அமைச்சகத்தின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இந்தக் கூட்டத்தில் குறைந்தபட்ச பென்சன் உயர்வு, புதிய ஊதிய சட்டத்தை அமல்படுத்துவது ஆகிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

குறைந்தபட்ச பென்சன் தொகையை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என 2021 மார்ச் மாதம் நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்தது. எனினும், குறைந்தபட்ச பென்சன் தொகையை 9000 ரூபாயாக உயர்த்த வேண்டுமென ஓய்வூதியதாரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்