ஆப்நகரம்

தமிழ்நாடு ராணுவ தளவாடத்தில் முதலீடு.. ஜெர்மனிக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு!

தமிழ்நாட்டின் ராணுவ தளவாடத்தில் ஜெர்மன் முதலீடுகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 7 Jun 2023, 12:35 pm
தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராணுவ தளவாடங்களில் ஜெர்மனி முதலீடு செய்ய வேண்டும் என ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸுடனான சந்திப்பின்போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil rajnath singh - boris pistorius
rajnath singh - boris pistorius


ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஜெர்மன் அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராணுவ தளவாடங்களில் ஜெர்மனி முதலீடு செய்ய வேண்டும் என போரிஸ் பிஸ்டோரியஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.

இந்தியாவில் ராணுவ உற்பத்தி துறையில் திறக்கப்பட்டுள்ள வாய்ப்புகள் குறித்தும் ராஜ்நாத் சிங் விவரித்தார். தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராணுவ தளவாடங்களில் ஜெர்மன் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், ஜெர்மனியின் ராணுவ தொழில்துறை மற்றும் அதன் விநியோக அமைப்பில் இந்திய ராணுவ தொழில்துறையும் பங்கேற்று, பங்களிப்பு வழங்குவது குறித்தும், மதிப்பு கூட்டுவது குறித்தும் இந்த சந்திப்பில் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

இதுபோக ஜெர்மனியை சேர்ந்த Thyssenkrupp நிறுவனமும், இந்தியாவின் Mazagon Dock Shipbuilders நிறுவனமும் இணைந்து 5.2 பில்லியன் டாலர் செலவில் இந்திய கடற்படைக்கு தேவையான ஆறு நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று ஜெர்மன் அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் டெல்லியில் இருந்து மும்பை வருகிறார். மும்பையில் அவர் Mazagon Dock Shipbuilders நிறுவனத்தை பார்வையிட இருக்கிறார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்