ஆப்நகரம்

ரயில் டிக்கெட் ரத்து செய்ய ஜிஎஸ்டி.. ரயில்வே அமைச்சகம் விளக்கம்!

ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய அரசு விளக்கம்.

Samayam Tamil 31 Aug 2022, 12:31 pm
ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து, டிக்கெட் உறுதியான பிறகு, டிக்கெட்டை கேன்சல் செய்தால் அதற்கான கட்டணத்துக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதேபோல ஹோட்டல் புக்கிங், விமான டிக்கெட் ரத்து செய்தாலும் அதற்கான கட்டணத்துக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என அரசு தெரிவித்தது.
Samayam Tamil railways


இதனால், ரயில்களில் அடிக்கடி பயணிப்போர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ரயில்வே விதிகளின்படி, உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால், அதற்கான முழு ரீஃபண்ட் தொகையும், டிக்கெட் புக் செய்தபோது வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியும் சேர்த்து செலுத்தப்பட்டுவிடும்.

எனினும், ஏசி மற்றும் முதல் வகுப்புகளுக்கான ரயில் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டால், அதற்கான ரத்து கட்டணத்துக்கு (cancellation charge) ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இந்த ஜிஎஸ்டி தொகையை நிதியமைச்சகம் வசூலிக்கிறது.

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு ரூ.47 லட்சம் சம்பளத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை!
எனவே, ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான ஜிஎஸ்டி முதல் வகுப்பு (First class) மற்றும் ஏசி வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். இதர வகுப்புகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது என்பதை ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போதைய சூழலில், ரயில் டிக்கெட் உறுதிசெய்யப்பட்டு, ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்தால், முதல் ஏசி வகுப்புக்கு 240 ரூபாயும், 2ஆம் ஏசி வகுப்புக்கு 200 ரூபாயும், 3ஆம் ஏசி வகுப்பு, ஏசி சேர் கார், ஏசி 3 எகானமி வகுப்புகளுக்கு 180 ரூபாயும், ஸ்லீப்பர் வகுப்புக்கு 120 ரூபாயும், இரண்டாம் வகுப்புக்கு 60 ரூபாயும் ரத்து கட்டணமாக (Cancellation charge) வசூலிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்