ஆப்நகரம்

ஆதார் கார்டில் பெரிய ஆபத்து.. உடனே இதை செஞ்சா நல்லது!

உங்களுடைய ஆதார் கார்டை தவறாகப் பயன்படுத்தி பண மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது. மொபைல் நம்பரை அப்டேட்டாக வைத்திருப்பது அவசியம்.

Samayam Tamil 3 May 2022, 10:27 am
தனிமனித அடையாள ஆவணமான ஆதார் கார்டுகள் இந்தியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் அவசியம். வங்கிக் கணக்கு முதல் சிம் கார்டு வரை அனைத்து விஷயங்களிலும் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil aadhaar


இந்த ஆதார் கார்டை வைத்து நிறையப் பேர் மோசடி செய்கின்றனர். நமக்கே தெரியாமல் ஆதார் கார்டை திருடி மோசடி செய்யவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல, ஆதார் கார்டை ஜெராக்ஸ் எடுப்பதற்கும் வேறு எதாவது காரணத்துக்காகவும் பல்வேறு இடங்களில் விட்டுவிடுவோம். இது நமக்கே ஆபத்தாக முடியலாம்.

ஆதார் கார்டு என்பது மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஒரு ஆவணமாகும். இதை மற்றவரிடம் கொடுக்கும்போது அதைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கும் வசதியும் உள்ளது. உங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படவும் வாய்ப்பு உள்ளது.

அதார் மோசடியைத் தடுக்க அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதோடு, மொபைல் நம்பரை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்கும்படி ஆதார் அமைப்பு (UIDAI) வலியுறுத்தியுள்ளது.

கை நிறைய சம்பளம் - அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

உங்களுடைய ஆதார் கார்டில் தற்போதைய மொபைல் நம்பர் இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க myaadhaar.uidai.gov.in/verify-email-mobile என்ற முகவரியில் சென்று பார்க்கலாம். மின்னஞ்சல் முகவரியையும் இதில் நீங்கள் சரிபார்க்கலாம்.

நம்மில் நிறையப் பேர் முதன்முதலில் ஆதார் வாங்கும்போது வைத்திருந்த மொபைல் நம்பரை கொடுத்திருப்போம். இப்போது அந்த மொபைல் நம்பர் இருக்காது. இதுபோன்ற சூழலில் நீங்கள் மொபைல் நம்பரை அப்டேட் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்துதான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்