ஆப்நகரம்

UPI: ஜனவரி முதல் பணம் அனுப்ப கட்டணம்!

கூகுள் பே போன்ற மொபைல் ஆப் மூலமாகப் பணம் அனுப்பினால் அதற்கு ஜனவரி முதல் நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

Samayam Tamil 3 Dec 2020, 10:58 am
ஜனவரி 1 முதல் மூன்றாம் தரப்பு ஆப் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் யுபிஐ சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) முடிவு செய்துள்ளது. எனவே நீங்கள் அமேசான், கூகுள் பே மற்றும் போன் பே போன்ற ஆப்களை பயன்படுத்தினால் ஜனவரி முதல் கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். 2021 ஜனவரி 1 முதல் இந்தியாவில் மூன்றாம் தரப்பு யுபிஐ கட்டண ஆப் பயன்பாட்டிற்கு 30% கேப் கட்டணம் விதிக்க NPCI முடிவு செய்துள்ளது.
Samayam Tamil payment


எனவே இந்த ஆப்களைப் பயன்படுத்தி நீங்கள் பணப் பரிவர்த்தனை செய்தால் அதற்காகக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். NPCI அமைப்பின் இந்த முடிவு Paytm நிறுவனத்தைப் பாதிக்காது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், இது கூகுள் பே, அமேசான் பே மற்றும் போன் பே போன்ற நிறுவனத்தின் பயனாளர்களை நிச்சயமாக பாதிக்கும். இருந்தாலும் இதுகுறித்து இந்நிறுவனங்கள் தரப்பிலிருந்து இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்!

எதிர்காலத்தில் யுபிஐ கட்டண முறையில் மூன்றாம் தரப்பு ஆதிக்கத்தைத் தடுக்க NPCI இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த மொபைல் ஆப்கள் மூலமாக பயனர்களுக்கு மலிவான சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில் NPCI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு பெரும்பாலான மக்கள் இதுபோன்ற மொபைல் ஆப் மூலமாகவே பணம் அனுப்பவும், கட்டணம் செலுத்தவுமாக இருக்கின்றனர். ஆனால் தற்போதைய அறிவிப்பு பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக, கூகுள் பே நிறுவனம் தனது பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன் பின்னர் இந்த நடவடிக்கை அமெரிக்காவில் மட்டுமே எனவும், இந்தியாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் அறிவித்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்