ஆப்நகரம்

HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

இந்தியா முழுவதும் 2000 வங்கிக் கிளைகளை அமைப்பதாக ஹெச்டிஎஃப்சி பேங்க் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 22 Jun 2022, 3:22 pm
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வகையில் வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. தனது சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்தவும், நாட்டின் மூலை முடுக்கெங்கும் உள்ள மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி நிறைய வங்கிக் கிளைகளை இவ்வங்கி புதிதாக அமைக்கிறது.
Samayam Tamil hdfc bank


இதுகுறித்து ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைமைச் செயலதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சசிதார் ஜகதீசன் கூறுகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 1500 முதல் 2000 வங்கிக் கிளைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஹெச்டிஎஃப் வங்கியுடன் ஹெச்டிஎஃப்சி நிறுவனம் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் பங்குதாரர்களுக்கு ஜகதீசன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் இந்த விவரங்களை வெளியிட்டார்.

ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு இப்போது மொத்தம் 6000 வங்கிக் கிளைகளைக் கொண்டுள்ளது. இதோடு ஒவ்வொரு ஆண்டும் 2000 வங்கிக் கிளைகளைப் புதிதாகத் திறக்க ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு சேவை வழங்கும் எண்ணிக்கையில் வங்கிக் கிளைகள் இப்போது இல்லை எனவும், அதை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதனுடன் ஏடிஎம் மையங்களும் அதிகமான அளவில் அமைக்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிகச் சுலபமாக அதி விரைவாக தங்களுக்கு அருகிலேயே பணம் எடுக்க முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்