அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஐபிஎம் (IBM). இந்நிலையில், ஐபிஎம் நிறுவனம் கிட்டத்தட்ட 4000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023ஆம் ஆண்டு தொடங்கி முதல் மாதத்திலேயே உலகளவில் ஆட்குறைப்பு சுனாமி தொடங்கிவிட்டது என கூறலாம். குறிப்பாக, அமெரிக்காவில் பல்வேறு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லயிரக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன.
ஏற்கெனவே அமேசான், ஃபேஸ்புக், ட்விட்டர், மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லாயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்துள்ளன. இதுபோக பல்வேறு பெரு நிறுவனங்கள், நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களும் சத்தமில்லாமல் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன.
இந்த வரிசையில், தற்போது அமெரிக்காவை சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் (IBM) சுமார் 3900 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், ஐபிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமான Kyndryl Holdings நிறுவனத்தில் அதிகளவில் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், சில சொத்துகளை விற்பனை செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் ஐபிஎம் முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கான இலக்கை தவறவிட்ட நிலையில் ஐபிஎம் நிறுவனம் ஆட்குறைப்பு செய்யவும், சொத்துகளை விற்று பணம் ஈட்டவும் முடிவு செய்துள்ளது.
இதுபோக, இந்தாண்டிலேயே அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. மேலும், முதலீடுகளும் குறைந்துள்ளன. இதனால், செலவுகளை குறைத்து நிதிநிலையை பாதுகாப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்கின்றன.
2023ஆம் ஆண்டு தொடங்கி முதல் மாதத்திலேயே உலகளவில் ஆட்குறைப்பு சுனாமி தொடங்கிவிட்டது என கூறலாம். குறிப்பாக, அமெரிக்காவில் பல்வேறு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லயிரக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன.
ஏற்கெனவே அமேசான், ஃபேஸ்புக், ட்விட்டர், மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லாயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்துள்ளன. இதுபோக பல்வேறு பெரு நிறுவனங்கள், நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களும் சத்தமில்லாமல் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன.
இந்த வரிசையில், தற்போது அமெரிக்காவை சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் (IBM) சுமார் 3900 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், ஐபிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமான Kyndryl Holdings நிறுவனத்தில் அதிகளவில் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், சில சொத்துகளை விற்பனை செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் ஐபிஎம் முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கான இலக்கை தவறவிட்ட நிலையில் ஐபிஎம் நிறுவனம் ஆட்குறைப்பு செய்யவும், சொத்துகளை விற்று பணம் ஈட்டவும் முடிவு செய்துள்ளது.
இதுபோக, இந்தாண்டிலேயே அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. மேலும், முதலீடுகளும் குறைந்துள்ளன. இதனால், செலவுகளை குறைத்து நிதிநிலையை பாதுகாப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்கின்றன.