ஆப்நகரம்

இந்த டெக்னிக்க வச்சு இரு மடங்கு லாபம் பெறலாம்!

72 விதியை பயன்படுத்தி எப்படி இருமடங்கு லாபம் சம்பாதிப்பது என்பதை பார்க்கலாம்.

Samayam Tamil 6 Oct 2020, 3:33 pm

கடினமாக சம்பாதித்த பணத்தை முதலீடு லாபம் ஈட்ட விரும்புவோர் அனைவருமே தங்களது பணம் அதிகப்படியான லாபத்தை ஈட்டித்தர வேண்டுமென விரும்புவர். அதிலும், இரு மடங்கு லாபம் கிடைத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள்?
Samayam Tamil Money


நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு அதிக வட்டி கிடைத்தால் நிச்சயமாக உங்கள் பணம் இருமடங்காக உயர்ந்துவிடும். பணத்தை இருமடங்காக்குவடு எப்படி என்பதை தெரிந்துகொள நீங்கள் 72 ஃபார்முலாவை பயன்படுத்த வேண்டும். அதாவது, 72ஐ உங்கள் பணத்திற்கு கிடைக்கும் வட்டியுடன் வகுத்தால் எவ்வளவு காலத்தில் பணம் இருமடங்காகும் என்று தெரிந்துவிடும்.

உதாரணமாக, நீங்கள் பணம் போட்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு ஆண்டுக்கு 5% வட்டி கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். 72ஐ 5ஆல் வகுத்தால் 14.4 வருகிறது. அப்போது, உங்கள் பணம் இருமடங்காக உயர 14 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும்.

Moratorium: கடனை சரியாக செலுத்தியவர்களுக்கும் சலுகை உண்டு!

இதே முதலீட்டை வைத்து மூன்று ஆண்டுகளில் பணத்தை இருமடங்காக்க வேண்டுமென்றால் உங்கள் பணத்திற்கு ஆண்டுக்கு 21% முதல் 24% வட்டி கிடைக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகளில் பணத்தை இருமடங்காக்க வேண்டுமெனில் ஆண்டுக்கு 14.4% வட்டி கிடைக்க வேண்டும். 10 ஆண்டுகளில் இருமடங்கு பணம் வேண்டுமென்றால் ஆண்டுக்கு 7% வட்டி கிடைக்க வேண்டும்.

PPF திட்டத்தில் ஆண்டுக்கு 7.1% வட்டி கிடைப்பதால் உங்கள் பணம் 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்து விடும்.

சுகன்யா சம்ரிதி யோஜனாவில் 7.6% வட்டி கிடைப்பதால் 9.4 ஆண்டுகளில் பணம் இருமடங்காகிவிடும்.

கிசான் விகாஸ் பத்திரத்தில் 6.9% வட்டி கிடைப்பதால் 10.4 ஆண்டுகளில் இருமடங்கு பணம் கிடைத்துவிடும்.

குறுகிய கால மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 8.5% வருமானம் கொடுக்கின்றன. இவற்றை பயன்படுத்தினால் 8.4 ஆண்டுகளில் பணம் இருமடங்காகிவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்