ஆப்நகரம்

கொரோனாவால் உயர்ந்த பழைய வாகனங்கள் விற்பனை!

பயன்படுத்தப்பட்ட கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான விற்பனை ஊரடங்கு காலத்தில் அதிகரித்துள்ளது.

Samayam Tamil 14 Jul 2020, 9:59 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியவுடன் அதன் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தொழில் நிறுவனங்களும் பொதுமக்கள் கூடும் பொதுவிடங்களும் மூடப்பட்டன. கொரோனா பாதிப்புகள் நீடித்த நிலையில் ஊரடங்கு காலமும் பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டன.
Samayam Tamil used cars


ஊரடங்கு காரணமாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறைந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஏப்ரல் மாத மத்தியில் தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின. பொதுமக்கள் நடமாட்டம் மீண்டும் தொடங்கியது. ஆனால் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருந்ததால் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தொடங்கப்படவில்லை. இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவை இயங்கின. இந்த ஊரடங்கு காலத்தில் இவ்வகை வாகனங்களுக்கான தேவை அதிகரித்தது.

ஆன்லைன் படிப்புகளுக்கு விரைவில் கல்விக் கடன்!

நிதி நெருக்கடியால் புதிய வாகனங்களையும் வாங்க முடியாது என்பதால் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள் மீது பொதுமக்களின் பார்வை திரும்பியுள்ளது. குறைந்த விலைக்கு நல்ல தரத்தில் இருக்கும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பார்த்து வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான சந்தை நல்ல ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் சந்தையில் முன்னிலை வகிக்கும் மகிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ், டுரூம், கார்ஸ்24 உள்ளிட்ட நிறுவனங்களின் வாகன விற்பனை கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து அதிகரித்துள்ளன.

உலக பணக்காரர்களுடன் முட்டி மோதும் அம்பானி!

ஸ்விஃப்ட், டிசையர், ஹோண்டா சிட்டி, ஐ10, ஸ்கார்பியோ, சாண்ட்ரோ உள்ளிட்ட கார்களை அதிகமாக வாங்கியுள்ளனர். பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் அவற்றின் விலையும் 2 சதவீதம் வரையில் அதிகரித்திருக்கிறது. ஜூன் மாதத்துக்கான வாகன விற்பனையானது 2019 ஜூன் மாத விற்பனையை விட அதிகரித்திருப்பதாக மகிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அஷுடோஷ் பாண்டே கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்