ஆப்நகரம்

விரைவில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க புதிய வசதி அறிமுகம்..!!

ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் பெறுதற்கு புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.

Samayam Tamil 7 Dec 2018, 10:38 am
ஏடிஎம்-களில் கார்டுகளை பயன்படுத்தி பணம் பெறுவதற்கு மாற்றாக, ஸ்மார்ட்போன்கள் மூலம் பணம் எடுக்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளன.
Samayam Tamil ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க புதிய வசதி விரைவில் அறிமுகம்..!!


நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில், கார்டுகளை பயன்படுத்தி மட்டுமே பணம் பெற முடியும். இதை இன்னும் எளிதாக்க, பணம் பெறுவதில் ஸ்மார்ட்போன பயன்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது.

அதன்படி, யுபிஐ செயலியில் உள்ள கியூ.ஆர் குறியீட்டை (QR) ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்கள் பணம் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய வங்கிகளின் யுபிஐ செயலி அல்லது மொபைல் பேக்கிங் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ஏடிஎம் கணினியில் தோன்று கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன், அந்த செயலிகளை பயன்படுத்தி ஸ்கான் செய்து பிறகு ’பின்’ நம்பரை வழங்கினால் பணம் பெற்றுக் கொள்ள முடியும்.

யுபிஐ செயலியை உருவாக்கிய ந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் (NPCI - National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. எனினும், இதை நடைமுறைப்படுத்துவதில் வங்கிகளுக்கு பெரியளவில் செலவு ஏற்பாடு என்று தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்