ஆப்நகரம்

100 ரூபாய் எடுத்தால் ரூ.2700 கோடி கிடைக்குமா.. அதிர்ச்சியில் உறைந்த தொழிலாளி!

வங்கிக் கணக்கில் 2700 கோடி ரூபாய் வந்திருப்பதாக மெசேஜ் பார்த்த தொழிலாளிக்கு இன்ப அதிர்ச்சி.

Samayam Tamil 5 Aug 2022, 5:16 pm
வங்கிக் கணக்கில் 200 ரூபாய் இருக்கிறது என்றால், அதில் 100 ரூபாய் எடுத்துவிட்டால் மீதம் 100 ரூபாய் இருப்பது உலக வழக்கம். ஆனால், 100 ரூபாய் எடுத்தபின் வங்கிக் கனக்கில் 2700 கோடி ரூபாய் பேலன்ஸ் இருக்கிறது என செய்தி வந்தால் எப்படி இருக்கும்?
Samayam Tamil cash


இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளருக்கு வந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிஹாரில் லால் என்பவர் ராஜஸ்தானில் செங்கல் சூளை தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

எனினும், பருவமழைக்காலத்தில் செங்கல் சூளை மூடப்பட்டுள்ளதால் உத்தரப் பிரதேசத்தில் தனது சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார். இவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ஏடிஎம்மில் 100 ரூபாய் பணம் எடுத்துள்ளார். ஆனால் பணம் எடுத்தபின் வந்த SMSஇல் அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

EMI: இனி அதிக இஎம்ஐ கட்டணும்.. கடன் வாங்கியவர்கள் கண்ணீர்!
அதாவது, தனது வங்கிக் கணக்கில் 2,700 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பேலன்ஸ் இருப்பதாக பிஹாரி லாலுக்கு SMS வந்துள்ளது. சரியாக 27,07,85,13,985 ரூபாய் அவர் கணக்கில் இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது.

இதன்பின் வங்கிக் கிளை மேலாளரை அணுகியுள்ளார். வங்கி மேலாளர் பார்த்தபோதும் 2,700 கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருப்பது உறுதியானது. ஆனால், இவ்வளவு பணம் கிடைத்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. இன்னொரு வங்கிக் கிளைக்கு சென்று பார்த்தால் தனது கணக்கில் 126 ரூபாய் மட்டுமே இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஏன் தவறுதலாக பேலன்ஸ் தொகை காட்டியது என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட வங்கியின் மாவட்ட நிர்வாகி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்