ஆப்நகரம்

240 ஆடுகள் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி!

உள்நாட்டில் கம்பளி உற்பத்தியை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து 240 செம்மறி ஆடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

Samayam Tamil 26 Dec 2019, 6:43 pm
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கம்பளி உற்பத்தியில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு தற்போது கம்பளி உற்பத்தி அளவு 558 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. அதை 1,000 டன்னுக்கு மேல் உயர்த்தும் நோக்கத்தில் செம்மறி ஆடுகளின் எண்ணிக்கையைப் பெருக்க அம்மாநில அரசு திட்டமிட்டது. அதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து ரூ.8.5 கோடி செலவில் 240 செம்மறி ஆடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவை மெரினோ வகையைச் சேர்ந்தவையாகும். காலம் காலமாகவே பொருளாதார ரீதியாக அதிகப் பயன்களைத் தரும் இந்த மெரினோ வகை செம்மறி ஆடுகள் கம்பளி உற்பத்திக்காகவே அதிகமாக வளர்க்கப்படுகின்றன.
Samayam Tamil 240 ஆடுகள் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி


இந்தியாவில் மெரினோ வகை செம்மறி ஆடுகள் குறைவான அளவிலேயே இருப்பதால் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்க ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஆடுகளுடன் கலப்பு இனப்பெருக்கம் செய்யப்படவுள்ளன. தேசிய கால்நடைத் திட்டத்தின் கீழ் இந்த ஆடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு இது மிகவும் பயனளிக்கும் எனவும், இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக இருக்கும் எனவும் அம்மாநில முதல்வர் திருவேந்திர ராவத் கூறியுள்ளார்.

கார் விலை குறைப்பு: போனா வராது பொழுது போனா திரும்பாது!!

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்தியாவில் செம்மறி ஆடுகளுக்கான கலப்பு இனப்பெருக்கம் நடைமுறையில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஆடுகள் தொழில்நுட்பம் சார்ந்த இனப்பெருக்க பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளன. இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஆடுகள் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்பட்டு கம்பளி உற்பத்தி உயர்த்தப்படும் எனவும், இதனால் விவசாயிகள் அதிகமாகப் பயன்பெறுவார்கள் எனவும் திருவேந்திர ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

App download: சீனாவை வீழ்த்தி இந்தியா சாதனை!

இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஆடுகள் அனைத்தும் தற்போது தேரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆடுகளுக்கு வாய், கால்களில் வியாதிகள் ஏதேனும் உள்ளனவா எனக் கண்டறிந்து தேவையான தடுப்பூசிகள் போடப்பட்டு ஒரு மாதத்துக்குள் இனப்பெருக்கத்துக்குத் தயார் படுத்தப்படும் என்று கால்நடை வளர்ப்புத் துறை செயலாளரான மீனாக்‌ஷி சுந்தரம் கூறுகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்