ஆப்நகரம்

காய்கறிகள், பழங்கள் விலை உயர்வு.. பொதுமக்கள் அவதி!

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் காய்கறிகள், பழங்களின் விலை தொடர் உயர்வு.

Samayam Tamil 2 Oct 2022, 2:15 pm
பண்டிகைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் மக்கள் ஷாப்பிங் செய்வதில் பிஸியாக இருக்கின்றனர். இதற்கிடையே, டெல்லி - என்சிஆர் பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தி வருகிறது.
Samayam Tamil vegetables


இதனால், டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள நொய்டா, குருகிராம் பகுதிகளை சேர்ந்த மக்கள் பண்டிகை சீசனில் பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் தத்தளித்து வருகின்றனர். சில்லரை வியாபாரிகள் மற்றும் ஸ்டோர்களிடம் காய்கறிகள், பழங்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பண்டிகை சீசன் டிமாண்ட் ஒரு பக்கம் இருக்க, கடும் மழை காரணமாக காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தரப்பில் கூறுகின்றனர். பல இடங்களில் காய்கறிகளும் பழங்களும் மார்கெட்டுக்கு வருவதற்கு முன்பாகவே அழுகிவிடுகிறதாம்.

SBI வாடிக்கையாளர்களுக்கு மெகா ஷாக்.. இனி அதிக EMI கட்டணும்!
டெல்லியில் காய்கறி விலை:

உருளைக்கிழங்கு - கிலோ 25 முதல் 30 ரூபாய்.

முட்டைக்கோஸ் - கிலோ 100 ரூபாய்

கத்திரிக்காய் - கிலோ 80 ரூபாய்

தக்காளி - கிலோ 50 ரூபாய்

காளிபிளவர் - கிலோ 130 ரூபாய்

கத்திரிகாய் - கிலோ 60 ரூபாய்

வெண்டைக்காய் - கிலோ 60 ரூபாய்

எலுமிச்சை - கிலோ 250 ரூபாய்

அடுத்த செய்தி

டிரெண்டிங்