ஆப்நகரம்

இரண்டு மடங்கு வீழ்ச்சியில் வாகன விற்பனை!

இந்த ஆண்டில் கொரோனா பாதிப்பால் வாகன விற்பனை இரு மடங்கு வீழ்ச்சியடையும் என்று ஆய்வு ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 May 2020, 6:27 pm
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாகவே கொரோனா பீதியால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்த்து மற்ற தேவைகளுக்கு செலவிடுவதை மக்கள் குறைத்துக்கொண்டுள்ளனர். இதனால் கார், நகை உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் வாகன விற்பனை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் வாகன விற்பனை இந்த ஆண்டில் மந்தமாகவே இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil auto


கிரிசில் நிறுவனம் இதுகுறித்த வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கு விளைவாக வாகன விற்பனை இரு மடங்கு வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பயணிகள் வாகனங்கள் விற்பனையில் 24 முதல் 26 சதவீதம் வரையில் வீழ்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, வர்த்தக வாகனங்கள் பிரிவில் 26 முதல் 28 சதவீதம் வரையில் வீழ்ச்சி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கிரிசில் நிறுவனம் சார்பாக சுமார் 26,000 நிறுவனங்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், வருவாய் வீழ்ச்சி அதிகமாக இருக்கும் எனவும், இத்துறையில் பணியிழப்புகள் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இனி அத்தியாவசியப் பொருட்கள் ட்ரோனில் பறந்து வரும்!

கொரோனா பீதியால் முதல் அடுக்கு நகரங்களில் மக்களிடையே தேவை குறைவு ஏற்பட்டுள்ளதால் வாகன விற்பனை இந்நகரங்களில் அடுத்து வரும் மாதங்களில் மந்தமாகவே இருக்கும் என்று கிரிசில் நிறுவனத்தின் இயக்குநரான ஹெடல் காந்தி கூறுகிறார். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வேலையின்மைப் பிரச்சினை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாக உள்ள ஆட்டோமொபைல் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் ஆட்டோமொபைல் துறையிலும் பணிநீக்கங்கள் அதிகரித்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்