ஆப்நகரம்

நீடா அம்பானிக்கு விவிஐபி பாதுகாப்பு

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானிக்கு, விவிஐபி அந்தஸ்திலான பாதுகாப்பு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

TNN 26 Jul 2016, 1:29 am
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானிக்கு, விவிஐபி அந்தஸ்திலான பாதுகாப்பு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Samayam Tamil vvip security cover for nita ambani
நீடா அம்பானிக்கு விவிஐபி பாதுகாப்பு


உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த 2013ம் ஆண்டு முதலாக, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது மனைவி நீடா அம்பானிக்கும் தற்போது சிறப்புப் பாதுகாப்பு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதையேற்று, ஒய் பிரிவின்கீழ், நீடா அம்பானிக்கு, 10 சிஆர்பிஎஃப் வீரர்கள் எந்நேரமும் பாதுகாப்பு வழங்குவதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலமாக, நாட்டிலேயே முதல்முறையாக, விவிஐபி அந்தஸ்தில் கமாண்டோ பாதுகாப்பு பெறும் அரசுப்பணி மற்றும் அரசியல் சாராத தனிநபர்கள் என்ற பெருமையை முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவியும் பெற்றுள்ளனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்