ஆப்நகரம்

50 இந்தியர்களை வேலையை விட்டுத் தூக்கிய வால்மார்ட்!

வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் 50 செயலதிகாரிகளை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கையால் மற்ற ஊழியர்களிடையே எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Jan 2020, 12:33 pm
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் உலகின் மிகப் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் 28 கடைகள் இருக்கின்றன. இங்கிருந்து சில்லறை விற்பனையாளர்களுக்குப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் தனது ஆதிக்கத்தை நீட்டிக்கவும், சந்தைப் பங்கை உயர்த்தவும் அதிகளவில் முதலீடு செய்துவரும் வால்மார்ட், தொழில் சீரமைப்புப் பணியில் துரிதமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு நடவடிக்கையாக, ஊழியர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் வால்மார்ட் நிறுவனத்தின் தேவையற்ற செலவுகள் குறைக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil 50 இந்தியர்களை வேலையை விட்டுத் தூக்கிய வால்மார்ட்



இந்த சீரமைப்பு நடவடிக்கையில் தற்போது 50 செயலதிகாரிகளை வால்மார்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. வால்மார்ட் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவில் வளர்ச்சி போதுமான அளவில் இல்லாததால் அப்பரிவில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் விற்பனையில் அதிகக் கவனம் செலுத்துவதால் நேரடி விற்பனைத் தொழிலில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்தான் என்று வால்மார்ட் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் 50 இந்தியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தங்கம் விலை: நகை வாங்குறவங்களுக்கு இனிப்பான செய்தி!

ஊழியர்கள் பணிநீக்கம் மட்டுமல்லாமல் புதிய கடைகளைத் திறக்கும் நடவடிக்கையிலும் வால்மார்ட் மும்முரமாக ஈடுபடவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மாறாக ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் 77 சதவிகிதப் பங்குகளை வால்மார்ட் கைப்பற்றியது. 16 பில்லியன் டாலர் தொகைக்கு இப்பங்குகளை வால்மார்ட் கைப்பற்றிய நிலையில் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்குக் கடும் போட்டியை வழங்கி வருகிறது வால்மார்ட்.

விலை உயரும் வாகனங்கள்... வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

வால்மார்ட் நிறுவனத்துக்கு இந்தியாவில் மட்டும் 5,300 பணியாளர்கள் இருக்கின்றனர். இதில் சுமார் 600 பேர் வால்மார்ட் தலைமை அலுவலகத்தில் பணியாற்றுகின்றனர். செலவைக் குறைக்கும் நடவடிக்கையில் ஊழியர்களின் எண்ணிக்கையை வால்மார்ட் நிறுவனம் குறைத்து வருவதால் அதன் பணியாளர்களிடையே அசாதாரண சூழல் நிலவுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்