ஆப்நகரம்

ஏடிஎம் கார்டை நீங்களே பிளாக் பண்ணலாம்... எப்படி?

ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணத்தைத் திருட வாய்ப்பு...

Samayam Tamil 5 Sep 2020, 12:38 pm
தொலைந்துபோன அல்லது திருடுபோன உங்களது ஏடிஎம் கார்டை உடனடியாக நீங்களே பிளாக் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்...
Samayam Tamil want to block your atm card just follow these simple steps
ஏடிஎம் கார்டை நீங்களே பிளாக் பண்ணலாம்... எப்படி?


திருடுபோனால் என்ன செய்வது?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களா நீங்கள்? திடீரென உங்களது எஸ்பிஐ ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டது; அல்லது திருடப்பட்டுவிட்டது. இந்த ஏடிஎம் கார்டைத் தவறாகப் பயன்படுத்தி உங்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருட வாய்ப்பு உள்ளது. உங்களது வங்கிக் கணக்கில் மோசடி நடப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக உங்களது ஏடிஎம் கார்டை நீங்கள் பிளாக் செய்ய வேண்டும். வங்கிகளுக்குத் தெரிவிப்பதன் மூலமோ அல்லது நீங்களாகவே கூட இதைச் செய்யலாம். ஏடிஎம் கார்டை நீங்களே எப்படி பிளாக் செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

ஆன்லைன் மூலமாகவே பிளாக் செய்யலாம்!

உங்களது எஸ்பிஐ ஏடிஎம் கார்டை ஆன்லைன் மூலமாகவே நீங்கள் செயலிழக்கச் செய்யலாம்.

www.onlinesbi.com என்ற இணையதளத்தில் உங்களது யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து உள்நுழையுங்கள்...

அதில் ’e-Services’ என்ற பிரிவின் கீழ் ATM Card Services என்ற வசதியில் Block ATM Card என்பதை கிளிக் செய்யுங்கள்.

உங்கள் டெபிட் கார்டுக்கான வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

செயலில் உள்ள மற்றும் பிளாக் செய்யப்பட்ட அனைத்து அட்டைகளும் காண்பிக்கப்படும்.

கார்டுகளின் முதல் 4 மற்றும் கடைசி 4 இலக்கங்கள் உங்களுக்குக் காண்பிக்கப்படும்.

பிளாக் செய்ய வேண்டிய கார்டைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் பிளாக் செய்ய விரும்புகிறீர்கள் என்று குறிப்பிட்டு 'Submit' கொடுங்கள்.

SMS மூலமாக உங்களது மொபைல் போனுக்கு OTP வரும் வசதியைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்த திரையில் OTP எண்ணைப் பதிவிட்டு 'Confirm' என்பதைக் கிளிக் செய்யவும்.

உடனே success மெசேஜுன் ஒரு Reference நம்பரும் வரும். அதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்..

ஏடிஎம் பரிவர்த்தனையில் புதிய பாதுகாப்பு!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கியிடமிருந்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பணப் பரிவர்த்தனைகளைப் பாதுகாக்கப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஒரு புதிய அம்சத்தை எஸ்பிஐ வங்கி தொடங்கியது. எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இருப்பு விசாரணை மற்றும் மினி ஸ்டேட்மென்ட் கேட்கும் ஒவ்வொரு கோரிக்கையிலும் எச்சரிக்கை செய்திகளை மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்