ஆப்நகரம்

சாம்சங் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. போலி விளம்பரத்தால் சிக்கல்!

சாம்சங் நிறுவனத்துக்கு ரூ.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காரணம் இதுதான்..

Samayam Tamil 23 Jun 2022, 11:26 am
சர்வதேச அளவில் எலெக்ட்ரானிக் பிரிவில் தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் விற்பனை செய்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே சாம்சங் நிறுவனம் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. ஸ்மார்ட்போன் பிரிவில் நிறைய புதிய நிறுவனங்கள் வந்துவிட்டதால் சாம்சங் நிறுவனத்துக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் சாம்சங் நிறுவனத்தின் சந்தைப் பங்குகள் குறைந்து வருகின்றன.
Samayam Tamil samsung


இதுபோன்ற சூழலில் சாம்சங் நிறுவனத்துக்கு மற்றொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலியான விளம்பரங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாகப் புகார்கள் வந்தன. ஆஸ்திரேலியாவில் எழுந்த இப்பிரச்சினையால் சாம்சங் நிறுவனத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.75.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் போட்டிகள் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

500 ரூபாய் பெருசா, 200 ரூபாய் பெருசா? நீங்க நம்பாட்டினாலும் அதுதான் நிஜம்!
சாம்சங் ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் மூழ்கினாலும் எந்த பாதிப்பு ஏற்படாது எனவும், கடல் போன்ற எந்தவொரு நீரிலும் நிலைத்து நிற்கும் எனவும் சாம்சங் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. ஆனால், தண்ணீரில் சாம்சங் போன்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் மீதான இந்த நடவடிக்கையால் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மை குறையத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே சந்தை வாய்ப்பை இழந்துவரும் சாம்சங் நிறுவனத்துக்கு இது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்