ஆப்நகரம்

பெர்சனல் லோன் எதுக்கு வாங்குறாங்க?

என்னென்ன காரணங்களுக்காக தனிநபர் கடன் வாங்குகிறார்கள் தெரியுமா?

Samayam Tamil 18 May 2021, 9:31 pm
திருமணத்துக்காகவோ அல்லது விலையுயர்ந்த பொருட்களை வாங்க விரும்பினாலோ பெர்சனல் லோன் வாங்க நினைக்கின்றனர். சிலர் நெருக்கடியான கடனை அடைக்கக் கூட பெர்சனல் லோன் வாங்குவார்கள். சிலர் வீட்டைப் புதுப்பிப்பதற்கு பெர்சனல் லோன் வாங்குவார்கள். ஏனெனில் வீட்டுக் கடன் வாங்குவதற்கு பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஆனால், வங்கிகளில் பெர்சனல் லோன் வாங்குவது மிகச் சுலபம். பெர்சனல் லோன் என்பது பாதுகாப்பற்ற கடன். இதற்காக, வங்கி அல்லது கடன் வழங்குபவருக்கு எந்தவிதமான கொலேட்ரல் அல்லது பாதுகாப்பு தேவையில்லை.
Samayam Tamil loan


பெர்சனல் லோன் வாங்குவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது கடன்தான். அதாவது ஏற்கெனவே வாங்கிய கடனை அடைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டால் அப்போது தனிநபர் கடன் வாங்கி அதை அடைக்கின்றனர். வேறு சிலரோ, கார் வாங்குவதற்கும் வீடு கட்டுவதற்கும் கூட பெர்சனல் லோன் வாங்குகின்றனர். இதற்கு தனியாகக் கடன்கள் கிடைத்தாலும் இதில் கொலேட்ரல் போன்ற பிரச்சினைகள் இல்லாததால் இதை அதிகமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். வீடு கட்டுவதை விட வீட்டைப் புதுப்பிப்பதற்காக அதிகப் பேர் பெர்சனல் லோன் வாங்குகின்றனர்.

கடன் வாங்கியோருக்கான சலுகை... ரிசர்வ் வங்கியின் திட்டம் என்ன?

திருமணச் செலவுகளுக்காக அதிகப் பேர் பென்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கின்றனர். தற்போதைய காலத்தில் திருமணத்துக்கு அளவுக்கு அதிகமாகச் செலவாவதால் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பெரிய தொகையைக் கடனாக வாங்கி 60 மாதங்களில் திருப்பிச் செலுத்துவது வசதியாக இருக்கிறது. பெர்சனல் லோனுக்கான ஒப்புதல் விரைவில் கிடைப்பதில் சில வங்கிகளில் கால தாமதம் ஆகிறது. சில வங்கிகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தால் உடனடி ஒப்புதல் செயல்பாட்டுக் கட்டணம் ரத்து போன்ற சலுகைகளையும் வழங்குகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்