ஆப்நகரம்

காய்கறி விலை ஏன் உயருது? மத்திய அரசு விளக்கம்!

சீரற்ற வானிலை காரணமாக காய்கறின் விலை சீரற்ற அளவில் ஏறி இறங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 4 Feb 2022, 8:58 pm
சென்ற ஆண்டின் நவம்பர் மாதத் தொடக்கத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் காய்கறி உற்பத்தி செய்யும் பகுதிகளில் மழை காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் தேவை அதிகரித்து விலை உயர்வு ஏற்பட்டது. அதுவும் தக்காளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. வெங்காயம் விலையும் அதிகமாகவே இருந்தது.
Samayam Tamil veg price


ஒவ்வொரு ஆண்டும் இதேபோலவே தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்ட முக்கியமான காய்கறிகளின் விலை அதிரடியாக உயருகிறது. இது பொதுமக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு காய்கறி விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர். இந்நிலையில், மோசமான வானிலை காரணமாகவே இதுபோன்ற திடீர் விலையேற்றம் ஏற்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல், “தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளின் விலை நிலையற்ற வகையில் இருப்பதற்கு வானிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. பாரம்பரியம் அல்லாத பகுதிகளில் இருந்தும், நாட்டின் இதர பகுதிகளில் இருந்தும் இந்த காய்கறிகளின் வரத்து, பயிரிடும் முறையில் பருவத்திற்கு ஏற்ப மாற்றம் ஏற்படுவதாலும், அடுத்த ரபி / கரீஃப் பருவத்திற்கு முன்கூட்டிய வரவு ஆகியவையும் காரணங்களாக உள்ளன” என்றார்.

இன்னைக்கு காய்கறி ரேட்... கேரட், தக்காளி விலை அதிகம்...
இதுபோன்ற நேரங்களில் உணவுப் பொருட்களின் விலையை சீராக்கி விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் உதவி செய்யும் வகையில் ’ஆபரேஷன் கிரீன்’ என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அறுவடை காலத்தில் பொருட்களின் வரத்து அதிகரிக்கும் நிலையில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்குஉள்ளிட்ட குறிப்பிட்ட காய்கறிகளுக்கான போக்குவரத்து மற்றும் இருப்பு வைத்தல் ஆகியவற்றுக்கான செலவில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது எனவும் தனது எழுத்துப்பூர்வமான பதிலில் பிரகலாத் சிங் படேல் விளக்கம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்