ஆப்நகரம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் சம்பளத்தில் வரும் மாற்றம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதோ..

Samayam Tamil 5 Oct 2022, 2:23 pm
சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அமைச்சரவையின் இந்த தீர்மானத்திற்குப் பின்னர், அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Samayam Tamil 7th pay


அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில், திருத்தப்பட்ட அகவிலைப்படி விகிதங்கள் 2022 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விரைவில் ஊழியர்களின் கணக்கில் பணம் வந்து சேரும். அகவிலைப்படியை உயர்த்தும் அரசின் முடிவால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பெரும் நிவாரணம் பெறுவார்கள்.

முன்னதாக, மார்ச் மாதத்தில் 3% அகவிலைப்படியை மத்திய அமைச்சரவை உயர்த்தியது. அப்போது அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் கார்டில் இலவச உணவு.. அரசுக்கு இவ்வளவு சுமையா?
இந்நிலையில், தற்போதைய அகவிலைப்படி உயர்வின் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

1. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதத்திற்கு பதிலாக 38 சதவீதம் வழங்கப்படும். இந்த உதவித்தொகை அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் இருக்கும். திருத்தப்பட்ட கட்டணம் 2022 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.

2. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் கீழ், பல்வேறு நிலைகளின் அடிப்படையில் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட ஊதிய அமைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அடிப்படை ஊதியத்தில் சிறப்பு அலவன்ஸ் எதுவும் இல்லை.

ஏடிஎம்மில் பணம் எடுக்க போறீங்களா? இது இல்லாமல் இனி எடுக்க முடியாது!
3. எந்தவொரு மத்திய அரசு ஊழியரின் சம்பளத்திலும் அடிப்படை ஊதியம் இன்றியமையாத பகுதியாகும். இது FR9(21) விதியின் கீழ் சம்பளமாக கருதப்படுகிறது.

4. செலவினத் துறையின் அறிவிப்பில், அகவிலைப்படி செலுத்துவதில் 50 பைசா அல்லது அதற்கு மேற்பட்ட தொகை முழு ரூபாயாகக் கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதை விட குறைவான தொகையை புறக்கணிக்க முடியும்.

5. தற்போதைய அறிவிப்பின்படி, திருத்தப்பட்ட அகவிலைப்படியின் பலன் பாதுகாப்பு சேவைகளின் சிவில் ஊழியர்களுக்குக் கிடைக்கும். இந்த செலவு குறிப்பிட்ட பாதுகாப்பு சேவை மதிப்பீட்டின் கீழ் வரும்.

6. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் விரைவில் வரத் தொடங்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்