ஆப்நகரம்

ஏடிஎம்மில் பணம் சிக்கிருச்சா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?

Samayam Tamil 9 Apr 2022, 5:03 pm
ஏடிஎம்கள் பொதுமக்களுக்கான மிக அத்தியாவசிய தேவையாக உள்ளன. கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் ஏடிஎம்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சில நேரங்களில் ஏடிஎம்கள் நம்மை சிக்கலில் சிக்கவைத்துவிடும்.
Samayam Tamil ATM


உதாரணமாக, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது பணம் வெளியே வராமல் சிக்கிக்கொள்ளும். மேலும், சில சமயங்களில் பணம் வெளியே வராது; ஆனால் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டுவிடும். இதுபோன்ற சூழல்களில் பொதுமக்கள் பதற்றமடைவது இயல்புதான்.

இத்தகைய சூழலில் பதற்றமடையத் தேவையில்லை. சொல்லப்போனால் இதற்கு தேவையான விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி உருவாக்கிவைத்துள்ளது. ஏடிஎம்மில் பணம் வராமலேயே உங்கள் வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டால் விரைவில் உங்கள் கணக்குக்கு பணம் மீண்டும் செலுத்தப்படும்.

5000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு தடை!
இப்படி உங்கள் கணக்குக்கு பணம் வராவிட்டால் அருகில் உள்ள வங்கிக் கிளைக்கு சென்று தகவல் தெரிவிக்கலாம். வங்கிக் கிளை மூடப்பட்டிருந்தால் வாடிக்கையாளர் சேவைக்கு (Customer care) அழைத்து தகவல் தெரிவிக்கலாம். உங்கள் புகார் பதிவு செய்துகொள்ளப்படும்.

பணத்தை திரும்பப் பெற ஏடிஎம்மில் வரும் ரசீது தேவை. அப்படி ரசீது இல்லாவிட்டாலும் வங்கி அறிக்கையை காட்டிக்கொள்ளலாம். இதன்பின் உங்களுக்கு 7 நாட்களுக்குள் பணம் திருப்பிச் செலுத்தப்படும். அப்படி பணம் வராவிட்டால் குறைதீர்ப்பு அதிகாரியிடம் தெரிவிக்கலாம். அதன்பின் ஒவ்வொரு நாளும் வங்கி உங்களுக்கு 100 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்