ஆப்நகரம்

உங்க பான் கார்டை வைத்து மோசடி நடக்கலாம்.. உஷாரய்யா உஷாரு!

ஒருவருடைய பான் கார்டை இன்னொருவர் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அதைத் தடுக்க நீங்கள் இதைச் செய்தால் போதும்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 24 Feb 2023, 7:59 am
Samayam Tamil pan card
இந்தியாவில் நிதி பரிவர்த்தனை செய்ய வேண்டும் அல்லது வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் அதற்கு பான் கார்டு தேவை. பான் கார்டு மூலம் மக்கள் தங்களுடைய நிதி பரிவர்த்தனைகளை எளிதாக செய்ய முடியும். அதோடு, வருமான வரியையும் தாக்கல் செய்யலாம். அதே நேரத்தில், இந்தியாவில் ஒரு நபருக்கு ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வழங்கப்படுகிறது. பான் கார்டு விஷயத்தில் நிறையப் பேர் சில பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர்.

பான் கார்டு விஷயத்தில் நிறைய மோசடி வழக்குகள் வெளி வந்துள்ளன. பான் கார்டு மோசடியால் திருட்டு, நிதி இழப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மோசடி செய்பவர்கள் பான் கார்டை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும், அதை எவ்வாறு தடுக்கலாம் என்றும் இங்கே பார்க்கலாம்.

தவறான பயன்பாடு!


ஒருவரின் பான் கார்டில் மோசடி செய்பவர்கள் கடன் வாங்கி மோசடி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. உங்களுடைய தகவலைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் கடன் வாங்கும்போது, அதைத் திருப்பிச் செலுத்தும் முழுப் பொறுப்பும் பாதிக்கப்பட்டவர் மீது விழுகிறது. அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது தவிர, சட்டவிரோதமாக நகைகளை வாங்குவதற்கும், ஓட்டல்கள் மற்றும் அறைகளை வாடகைக்கு எடுப்பதற்கும் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படலாம்.

பென்சன் தொகை உயர்வு.. ஓய்வூதியதாரர்களுக்கு செம குட் நியூஸ்!

இதெல்லாம் முக்கியம்!

  • உங்கள் கிரெடிட் ஸ்கோர் அல்லது CIBIL ஸ்கோரை தொடர்ந்து சரிபார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்ப்பதன் மூலம், உங்கள் பான் கார்டில் வேறு யாரேனும் தவறாகக் கடன் வாங்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறியலாம்.

  • உங்கள் பான் கார்டின் நகலை வேறு ஒருவரிடம் கொடுக்கும்போதெல்லாம், அதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அந்த நகலை ஏன் கொடுக்கிறீர்கள் எனவும், அதற்கான காரணத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டால் தவறான பயன்பாடு தவிர்க்கப்படும்.

  • சந்தேகத்திற்கிடமான எந்த இணையதளத்திலும் உங்கள் பான் கார்டு தகவலை கொடுக்க வேண்டாம்.

  • ஒருவேளை உங்கள் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டது உங்களுக்குத் தெரியவந்தால், TIN NSDL வெப்சைட்டில் சென்று புகார் கொடுக்கலாம்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்