ஆப்நகரம்

வாட்ஸ் ஆப் பீதி: டெலிகிராமில் குவியும் படை!

வாட்ஸ் ஆப் குறித்து பரவி வரும் தகவலால் டெலிகிராம் செயலியில் 2.5 கோடிப் பேர் புதிதாக இணைந்துள்ளனர்.

Samayam Tamil 13 Jan 2021, 6:24 pm
அமெரிக்காவின் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் ஆப் செயலி சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான தகவல் தொடர்புச் செயலியாகத் திகழ்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் வாட்ஸ் ஆப் செயலி இல்லாத ஸ்மார்ட்போனே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள அம்சங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றவாறும் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருப்பதால் இதன் பயன்பாடு இந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கிறது. இதுபோன்ற சூழலில், பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ் ஆப் செயலியின் பிரைவசி கொள்கை மாறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil WA


இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பயனாளர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உரையாடும் விஷயங்கள் மற்றும் பரிமாரிக்கொள்ளும் தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ் ஆப்பால் கண்காணிக்கப்பட்டு சேகரிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் பெரும்பாலானோர் வாட்ஸ் ஆப் பயன்பாட்டைத் தவிர்த்து வருகின்றனர். பலர் வாட்ஸ் ஆப்பை அன்-இன்ஸ்டால் செய்து வருகின்றனர். வாட்ஸ் ஆப்புக்கு மாற்றாக டெலிகிராம், சிக்னல் போன்ற ஆப்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

வாட்ஸ் ஆப் மீதான இந்த பீதி காரணமாக டெலிகிராம் செயலியை அதிகப் பேர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். டெலிகிராம் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 72 மணி நேரங்களில் மட்டும் 2.5 கோடிப் பேர் புதிதாக டெலிகிராம் செயலியில் இணைந்துள்ளனர். அதோடு, மாதாந்திர ஆக்டிவ் யூசர்ஸ் எண்ணிக்கை 500 மில்லியனைத் தாண்டியுள்ளது. டெலிகிராம் செயலியில் புதிதாக இணைந்தவர்களில் ஆசியாவிலிருந்து 38 சதவீதத்தினரும், ஐரோப்பாவிலிருந்து 27 சதவீதத்தினரும், லத்தீன் அமெரிக்காவிலிருந்து 21 சதவீதத்தினரும் இருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்