ஆப்நகரம்

விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி ஓய்வு அறிவிப்பு!!

விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர், செயல் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரும், இந்தியாவின் 2வது பெரிய பணக்காரருமான அசிம் பிரேம்ஜி வரும் ஜூலை மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால், தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்தில் செயல் இயக்குநர் அல்லாத அதிகாரியாக தொடர்ந்து பணியாற்றி வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Jun 2019, 5:39 pm
விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர், செயல் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரும், இந்தியாவின் 2வது பெரிய பணக்காரருமான அசிம் பிரேம்ஜி வரும் ஜூலை மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால், தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்தில் செயல் இயக்குநர் அல்லாத அதிகாரியாக தொடர்ந்து பணியாற்றி வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி ஓய்வு அறிவிப்பு
விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி ஓய்வு அறிவிப்பு


விப்ரோ நிறுவனத்தில் கடந்த 1960ஆம் ஆண்டுகளில் இருந்து பணியாற்றி வருபவர் அசிம் பிரேம்ஜி. அந்த நிறுவனத்தின் நிறுவனரும் கூட. இவர் விப்ரோ எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அல்லாத பொறுப்பில் சில காலம் பணியாற்றியுள்ளார். மேலும் விப்ரோ ஜிஇ ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநராக இருந்துள்ளார்.

தற்போது இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் அபிதாலி இசட் நீமுச்வாலா புதிய மேலாண்மை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரே தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார்.

அசிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் ஏ பிரேம்ஜி வரும் ஜூலை 31ஆம் தேதியில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு முழுநேர இயக்குநராக செயல்படுவார் என்று விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்