ஆப்நகரம்

PNB: பெண்களின் வருமானத்துக்கு முத்தான நான்கு திட்டங்கள்!

பெண்களுக்கு கடன் வழங்கும் சிறப்புத் திட்டங்களை பஞ்சாப் நேஷனல் பேங்க் செயல்படுத்தி வருகிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 27 Feb 2021, 4:51 pm
1. Women Entrepreneurs Fund Scheme
Samayam Tamil loan


மகிளா உதயம் நிதி என்ற திட்டத்தின் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு சிறப்புக் கடனுதவியை பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பெண்கள் தங்களது தொழிலைத் தொடங்கி நடத்த முடியும். புதிய தொழில்நுட்பம், தொழில் வளர்ச்சி, திறன் மேம்பாடு போன்றவற்றில் பெண்களுக்கு இத்திட்டம் பெரிதும் உதவுகிறது.

2. Mahila Samridhi Yojana

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் தொழில் நிறுவனம் அமைப்பதற்கான உள்கட்டுமான வசதிகளுக்கு இவ்வங்கி கடன் வழங்குகிறது.

3. Scheme to start crèche

பெண்கள் தங்களது வீட்டிலேயோ அல்லது தனியாக ஒரு இடத்திலோ குழந்தைகள் பராமரிப்பு மையத்தைத் தொடங்க விரும்பினால் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இந்த மையத்துக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க இதில் நிதியுதவி கிடைக்கிறது.

4. Mahila Sashaktikaran Scheme

இத்திட்டத்தின் கீழ் பெண்கள் தங்களது தொழிலை முன்னேற்றிச் செல்ல முடியும். வேளாண்மை அல்லாத இதர சிறு தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு மற்றும் இதர அமைப்புகள் மூலமாக உதவிகள் வழங்கப்படுகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்