ஆப்நகரம்

ஆபீஸ் வர முடியாது.. வேலையே வேண்டாம்.. வெளியேறிய 800 பேர்!

மீண்டும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற முடியாது என 800 பேர் பணி விலகியுள்ளனர்.

Samayam Tamil 12 May 2022, 3:16 pm
2020 மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இக்காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலைபார்க்க அனுமதித்தன.
Samayam Tamil WFH


வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வசதி தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நிறுவனங்களுக்கும் அலுவலக வாடகை, மின் கட்டணம், உள்ளிட்ட செலவுகள் குறைவதால் வீட்டிலிருந்தே வேலைபார்க்கும் முறையைப் பெரும்பாலான நிறுவனங்கள் கடைபிடிக்கத் தொடங்கின. கொரோனா பாதிப்புகள் குறைந்த இயல்பு நிலை திரும்பத் தொடங்கியவுடன் நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது ஊழியர்களை அலுவலகத்துக்கு வரவைத்தன.

சிலர் வீட்டில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு அலுவலகத்துக்கு ஆர்வமுடன் திரும்பினர். இன்னும் சிலரோ அதற்கு மாறாக வீட்டிலிருந்தே தொடர்ந்து வேலை பார்க்க விரும்பினர். தொடர்ந்து ஒன்று - இரண்டு ஆண்டுகள் வீட்டிலேயே இருந்துவிட்டு மீண்டும் அலுவலகத்துக்கு வருவது, அலைச்சல் போன்ற சிரமங்கள் சிலருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் வேலையே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டனர்.

வேலையை விட்டு வெளியேறும் பெண்கள்.. இதுதான் காரணமா?

கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் கட்டுப்பாட்டின் இயங்கும் நிறுவனம்தான் ஒயிட் ஹேட் எஜுகேசன் டெக்னாலஜி. இந்த நிறுவனமும் ஆன்லைன் கல்விச் சேவைதான் வழங்குகிறது. இதுவொரு ஸ்டார்ட் அப் நிறுவனம். இந்த நிறுவனத்தில் வேலைபார்த்தவர்கள் வீட்டிலிருந்துதான் வேலை பார்த்தனர். ஆனால் இப்போது அவர்கள் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று நிறுவனம் உத்தரவிட்டது.

மார்ச் 18ஆம் தேதி இந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இனி யாரும் வீட்டிலிருந்து வேலைபார்க்கக் கூடாது எனவும், ஏப்ரல் 18 முதல் அலுவலகத்துக்கு வரவேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால், பெரும்பாலான ஊழியர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை. எனவே தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறத் தொடங்கினர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 800 பேர் வெளியேறிவிட்டனர் என்றால் பாருங்களேன்!

இன்னும் நிறையப் பேர் தங்களது வேலையை விட்டு வெளியேறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தனை நாள் வீட்டில் இருந்துவிட்டு உடனடியாக அலுவலகத்து வருவதில் சிரமம் இருப்பதாகவும், வீடு, குழந்தைகளின் பள்ளி போன்றவற்றை உடனடியாக மாற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிய ஊழியர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்