ஆப்நகரம்

WFH: வீட்டிலிருந்து வேலை செய்தால் வரி கட்டணும்! பகீர் தகவல்!

வீட்டில் இருந்தே வேலை செய்யும் ஊழியர்களுக்கு வரிச் சுமை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 17 Aug 2020, 2:59 pm

கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியபிறகு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலைசெய்ய அனுமதித்தன.
Samayam Tamil வீட்டிலிருந்தே வேலை


வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்தது ஒருவகையில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகவே இருந்தது. வீட்டில் இருந்து பணிபுரிவதால் ஏராளமான செலவுகள் குறைகிறது. மேலும், பல நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றியுள்ள நெருக்கடி சூழலில் வேலைவாய்ப்பும், வருமான உத்தரவாதமும் ஊழியர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் உள்ளது.

தங்கப் பத்திரம்: குறைந்த முதலீடு - செம லாபம்! எப்போ வாங்கணும்?

இருப்பினும், வீட்டில் இருந்து வேலை செய்வதால் வரி சுமை உயரும் என்று கூறப்படுகிறது. அதாவது, ஊழியர்கள் தினசரி வேலைக்காக அலுவலகம் வந்துகொண்டிருந்தபோது conveyance allowance, leave travel allowance, house rent allowance என பல்வேறு படிகள் வழங்கப்பட்டன.

ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலைசெய்வதால் மேற்கூறிய படித் தொகையை செலவிட முடியாமல் போகிறது. இப்படி செலவிடாத தொகைக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

படித் தொகையை செலவிட்டால் மட்டுமே அதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதன்படி வரி விலக்கை பெறுவதற்கு உரிய ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், பயணம் செய்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால் படிக்கு வரி கட்ட நேரிடும்.

தற்போது கொரோனா ஊரடங்கில் பயணம் பாதுகாப்பானது அல்ல. அதுபோக, ஏராளமான ஊழியர்கள் பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்று அங்கிருந்து வேலை செய்து வருகின்றனர். ஆகவே, படித் தொகைக்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்