ஆப்நகரம்

இந்தியாவுக்கு உதவும் உலக வங்கி! சிறு நிறுவனங்கள் துறை மகிழ்ச்சி!

இந்தியாவின் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறையை மேம்படுத்தும் திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

Samayam Tamil 7 Jun 2021, 6:10 pm
சர்வதேச நாடுகளின் வளர்ச்சியில் உலக வங்கி பெரும் பங்காற்றி வருகிறது. குறிப்பாக இந்தியாவின் வளர்ச்சிக்கு உலக வங்கி தொடர்ந்து உதவி வருகிறது. மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு பெரிய அளவில் நிதியுதவியை உலக வங்கி அளித்து வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் கடுமையான இன்னல்களைச் சந்தித்திருக்கும் நிலையில் அதை மீட்டெடுக்கும் திட்டத்தில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மிக முக்கியமாக, சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறையை மீட்டெடுக்க சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil MSME


MCRRP என்ற சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறையின் மீட்புத் திட்டத்துக்கு உலக வங்கி ஆதரவு வழங்கியுள்ளது. 500 மில்லியன் டாலர் மதிப்பிலான இத்திட்டத்துக்கு உலக வங்கியின் செயலாக்க இயக்குநர்களுக்கான வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னதாக 2020 ஜூலை மாதத்தில் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான 750 மில்லியன் டாலர் திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் வழங்கியிருந்தது. இதன் மூலம் மில்லியன் கணக்கான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெற்றிருந்தன.

5 ரூபாய் நோட்டுக்கு ரூ.30,000 கிடைக்கும்... அருமையான வாய்ப்பு!

இன்றைய தேதி வரையில் 50 லட்சம் நிறுவனங்கள் அரசின் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுள்ளன. உலக வங்கியின் ஆதரவுடன் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறையின் உற்பத்தி மதிப்பை சென்ற ஆண்டை விட 1.25 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறையானது இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. கொரோனா பாதிப்பால் துவண்டுபோன அத்துறையை மீட்டெடுக்கும் மத்திய அரசின் முயற்சியில் உலக வங்கியும் தற்போது கைகோர்த்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்