ஆப்நகரம்

மாடர்னாகும் ரயில்வே துறை.. உலக வங்கி 245 மில்லியன் டாலர் கடன்!

ரயில்வே சரக்கு போக்குவரத்தை நவீனப்படுத்துவதற்கு உலக வங்கி 245 மில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல்.

Samayam Tamil 24 Jun 2022, 12:08 pm
ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்து மற்றும் லஜிஸ்டிக்ஸை நவீனப்படுத்துவதற்காக 245 மில்லியன் டாலர் கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
Samayam Tamil railways


ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்து மற்றும் சேமிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாலும், நவீனப்படுத்துவதாலும் சாலையில் சரக்கு போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும், இதன் விளைவாக போக்குவரத்து நெரிசலையும், வாகன புகையால் காற்று மாசுபடுவதையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து நவீனப்படுத்தப்பட்டால் ரயில்வே துறையில் தனியார் முதலீடுகள் குவியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 71% சரக்குகள் சாலை வழியாகவும், 17% சரக்குகள் ரயில்கள் வழியாகவும் நகருகின்றன.

கூட்டுறவு வங்கிகளில் வீட்டு கடன்.. ரிசர்வ் பேங்க் உத்தரவால் ஹேப்பி!
கடந்த சில ஆண்டுகளில் சரக்கு போக்குவரத்து துறையில் ரயில்வே தனது பங்கை இழந்துகொண்டே வருகிறது. லாரிகள் வாயிலான சரக்கு போக்குவரத்தில் காற்று மாசுபாடு, சாலை விபத்துகள் உள்ளிட்ட பிரச்சினைகளும் இருக்கின்றன.

லாரிகள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே ரயில்கள் வெளியிடுகின்றன. 2018ஆம் ஆண்டில் மொத்த சாலை விபத்துகளில் லாரிகளின் பங்கு 12.3% ஆக இருந்துள்ளது.

எனவே, ரயில்களில் சரக்கு போக்குவரத்தை அதிகப்படுத்த அரசு திட்டமிடுகிறது. ஆனால் இதற்கு ரயில் சரக்குப் போக்குவரத்தை நவீனமயமாக்குதல் அவசியமாக உள்ளது. இதற்காக உலக வங்கி வழங்கும் கடன் தொகை பயன்படுத்தப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்