ஆப்நகரம்

மாதம் ரூ.10,000 பென்சன் வாங்க சூப்பரான திட்டம்!!

இப்படி ஒரு திட்டம் இருப்பது தெரியாம போச்சே!!

Samayam Tamil 27 Nov 2020, 4:05 pm
எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி திட்டம் மூலமாக ஒரே பிரிமியம் தொகை செலுத்தி நீங்கள் ஓய்வுக் காலத்தில் மாதா மாதம் 10,000 ரூபாய் பென்சன் வாங்க முடியும். அத்திட்டம் குறித்து இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil you can get 10000 rupees pension every month with this lic plan
மாதம் ரூ.10,000 பென்சன் வாங்க சூப்பரான திட்டம்!!


ஓய்வூதியம்!

இந்த இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க ஆயத்தமாக வேண்டும். உங்களது குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், உங்களது இறுதிக் காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்சன் அல்லது முதலீட்டுத் தொகை உதவியாக இருக்கும். அதற்கு எல்ஐசி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

ஜீவன் சாந்தி பாலிசி!

எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வரும் பென்சன் திட்டங்களிலேயே மிகவும் சிறப்பான ஒரு திட்டம்தான் எல்ஐசி ஜீவன் சாந்தி பாலிசித் திட்டம். இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் ஒரேயொரு பிரீமியம் செலுத்தி உங்கள் வாழ்நாள் முழுவதும் மாதத்துக்கு 10,000 ரூபாய் பென்சன் பெற முடியும். இத்திட்டத்தில் நீங்கள் உடனடியாகப் பென்சன் வாங்க முடியும். அல்லது நீங்கள் 5, 10, 15, 20 ஆண்டுகளிலும் பென்சன் வாங்கலாம். பென்சன் வாங்கத் தொடங்கிய அடுத்த ஒரு வருடத்தில் நீங்கள் கடன் வாங்கிக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. அதேபோல, பென்சன் வாங்கத் தொடங்கிய பிறகு மூன்று மாதங்களில் நீங்கள் பாலிசியை சரண்டர் செய்யவும் முடியும்.

வயது வரம்பு எவ்வளவு?

நீங்கள் இந்த பாலிசியை வாங்குவதற்குக் குறைந்தபட்சம் 30 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதேபோல அதிகபட்சம் 85 வயது வரையில் இந்த பாலிசியை வாங்கலாம். 37 வயது நிரம்பிய ஒருவர் இந்த பாலிசியை வாங்குவதாக இருந்தால் அவர் ஒரே பிரீமியம் தொகையாக ரூ.20,36,000 செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் உடனடியாக அவர் பென்சன் வாங்க முடியும். அவருக்கு மாதத்துக்கு ரூ.10,067 என்ற அளவில் பென்சன் வந்துகொண்டிருக்கும். அதேபோல, மாதா மாதம் பென்சன் வாங்காமல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்துக்கு ஒரு முறையே பென்சன் வாங்கிக் கொள்ளலாம்.

எப்போது வரை பென்சன் கிடைக்கும்?

எல்ஐசி ஜீவன் சாந்தி பாலிசியை வாங்கியர் மரணிக்கும் வரை அவருக்கு பென்சன் தொகை கிடைத்துக்கொண்டே இருக்கும். அவர் இறந்த பிறகு இந்த பாலிசி செயலிழந்துவிடும். ஒரே பிரீமியம் தொகை செலுத்தி மாதத்துக்கு 14,000 ரூபாய் பென்சன் வாங்கும் மற்றொரு திட்டமும் இதில் உள்ளது. இதன் மூலம் உங்களது எதிர்காலம் என்னும் பாதுகாப்பாக இருக்கும் என்று எல்ஐசி நிறுவனம் கூறுகிறது. கொரோனா போன்ற பிரச்சினைகள் ஏற்படும்போது மாதத்துக்கு ஒரு நிலையான தொகை வந்துகொண்டிருந்தால் சமாளிக்க முடியும். எனவே எல்ஐசி ஜீவன் சாந்தி பாலிசி வாங்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்