ஆப்நகரம்

ஆதார் கார்டை வச்சு கடன் வாங்கலாமா? இது தெரியாம போச்சே!!

ஆதார் கார்டு வெறும் அடையாளம் மட்டுமல்ல; அதை வைத்து பெர்சனல் லோனும் வாங்கலாம்!

Samayam Tamil 26 Sep 2021, 10:15 pm
இந்தியர்கள் அனைவருக்குமே ஆதார் கட்டாயமாகும். ஆதார் இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியாது. பிறப்பு முதல் இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் இப்போது அவசியமாகிவிட்டது. வங்கிக் கணக்கு, சிம் கார்டு, பிஎஃப் கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட அனைத்திலும் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். இது தனிநபரின் மிக முக்கியமான அடையாள ஆவணமாகும்.
Samayam Tamil aadhaar


இதை வெறும் அடையாள ஆவணமாக மட்டும் நினைக்க வேண்டாம். இதுல் வேறு சில பயன்களும் உள்ளன. ஆதார் கார்டை வைத்து நீங்கள் கடன் வாங்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் எந்த வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வங்கியின் வெப்சைட் அல்லது மொபைல் ஆப்பில் சென்று ’personal loan' என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

உங்களுக்கு பெர்சனல் லோன் வாங்குவதற்கான தகுதிகள் உள்ளனவா என்று பார்த்துவிட்டு, லோனுக்கு apply செய்ய வேண்டும்.

லோன் வாங்கப் போறீங்களா? இதைப் பாத்துட்டு வாங்குங்க!
இப்போது புதிதாக அப்ளிகேசன் பேஜ் ஓப்பன் ஆகும். அதில் உங்களுடைய தனிநபர் விவரங்கள், வேலை, தொழில் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.

இதன் பிறகு நீங்கள் வழங்கிய விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கி சரிபார்க்கும். எல்லாம் சரியாக இருந்தால் உங்களது ஆதார் கார்டை அப்லோடு செய்ய வேண்டியிருக்கும்.

உங்களது கடன் தொகை இப்போது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுவிடும்.

23 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த வசதியில் கடன் பெறமுடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்