ஆப்நகரம்

ஏடிஎம் உங்களுக்கு சொந்தம்.. பணம் சம்பாதிக்க நல்ல ஐடியா!

நீங்களும் சொந்தமாக ஏடிஎம் அமைத்து அதன் மூலம் பல லட்சம் சம்பாதிக்கலாம். அது எப்படி என்று இங்கே பாருங்கள்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 6 Jun 2023, 10:40 am
நீங்களும் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி, ஏடிஎம் மூலம் தொழில் செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. அதற்கு விண்ணப்பித்தால் நீங்களும் வீட்டில் இருந்தபடியே மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்.
Samayam Tamil atm


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, ஏடிஎம்களின் உரிமைக்கான விண்ணப்பங்களை வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள வங்கிக் கிளைகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தொழில் வாய்ப்பு வழங்கவும் இந்த நடவடிக்கையை எஸ்பிஐ மேற்கொண்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு SBI ATM உரிமையை நீங்கள் பெறலாம்.

SBI வங்கியின் ATM அமைக்க விரும்பினால், நீங்கள் மூன்று நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நிறுவனங்களின் பட்டியலில் Tata Indicash, Muthut ATM மற்றும் India One ATM ஆகியவை அடங்கும். இந்த நிறுவனங்கள் வங்கி சார்பில் ஏடிஎம்களை நிறுவுகின்றன. நீங்கள் ATM மையத்தை நிறுவ விரும்பினால், உங்களிடம் 50 முதல் 80 சதுர மீட்டர் இடம் இருக்க வேண்டும். மேலும், உங்கள் இருப்பிடத்தைச் சுற்றி 100 மீட்டருக்குள் வேறு ஏடிஎம்கள் இருக்கக் கூடாது.

நீங்கள் அமைக்கும் ஏடிஎம் போக்குவரத்து வந்தி உள்ள இடத்தில் இருக்க வேண்டும். இது தவிர இந்தப் பகுதியில் 1 கிலோவாட் மின் இணைப்பு இருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்களிடம் இருந்தால் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று நிறுவனங்களில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். உங்கள் ஏடிஎம் மையத்தின் கூரை வலுவாக இருக்க வேண்டும். அதோடு இந்த ஏடிஎம் மையத்தை அமைப்பதற்கு தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும்.

ஏடிஎம் நிறுவப்பட்டதும், ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் நீங்கள் சம்பாதிக்கத் தொடங்குவீர்கள். ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் நீங்கள் ரூ. 8 கமிஷன் பெறுவீர்கள். அதே நேரத்தில், ஒவ்வொரு பணமில்லா பரிவர்த்தனைக்கும் உங்களுக்கு ரூ. 2 கிடைக்கும். பணமில்லா பரிவர்த்தனைகளில் நிலுவைகளை சரிபார்த்தல், மினி ஸ்டேட்மெண்ட் எடுப்பது ஆகியவை இதில் அடங்கும். இதன் மூலம் நீங்கள் நிறைய சம்பாதிக்கலாம்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்