ஆப்நகரம்

ஏடிஎம் மெஷினைத் தொடாமலேயே பணம் எடுக்கலாம்!

ஏடிஎம் மெஷின் மற்றும் பட்டன்களைத் தொடாமலேயே QR code மூலமாகப் பணம் எடுக்கும் வசதி வந்துள்ளது.

Samayam Tamil 11 Feb 2021, 6:55 pm
கொரோனா வந்தபிறகு வங்கிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. கையில் மாற்றும் பணத்தில் கூட கொரோனா பரவும் என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். எனவே வங்கிகளில் காண்டாக்ட்லெஸ் முறையில் நிதிச் சேவைகள் வழங்குவதை வங்கிகள் உறுதி செய்துவருகின்றனர்.
Samayam Tamil atm


வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கொரோனா பரவும் என்ற அச்சம் கூட தொடக்கத்தில் பலருக்கு இருந்தது. ஏடிஎம் மெஷின்களில் தினமும் பலர் பணம் எடுத்துச் செல்கின்றனர். இதுபோன்ற சூழலில் ஏடிஎம் மெஷினைத் தொடாமலேயே பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

AGS Transact Technologies என்ற நிறுவனம் இதற்கான மென்பொருளைத் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் Master Card நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மெஷின்களில் கை வைக்காமலேயே பணம் எடுக்க முடியும்.

அது என்ன நம்பர் 1947? ஆதார் பிரச்சினைகளுக்கு தீர்வு!

இந்த வசதி இப்போது அனைத்து வங்கிகளிலும் இன்னும் வரவில்லை. முதற்கட்டமாக பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இந்த வசதி வந்துள்ளது. ஸ்மார்ட்போனில் வங்கி செயலியில் QR Cash Withdrawal வசதியைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.

எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதை டைப் செய்து ஏடிஎம் மெஷின் ஸ்கிரீனில் இருக்கும் QR code ஸ்கேன் செய்து ஏடிஎம் PIN நம்பரைப் பதிவு செய்து பணத்தை எடுக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்