ஆப்நகரம்

இரண்டே நிமிடத்தில் ரூ.2 லட்சம் கடன் வாங்கலாம்!

பேடிஎம் ஆப் மூலமாக 2 நிமிடத்தில் ரூ.2 லட்சம் வரையில் கடன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Jan 2021, 6:25 pm
இந்தியாவின் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றான பேடிஎம் (Paytm) உடனடி தனிநபர் கடன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் இந்தச் சேவையை ஆண்டின் 365 நாட்களும் பெறலாம். அதாவது விடுமுறை நாட்களிலும் இந்தக் கடனுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வங்கியல்லா நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் பேடிஎம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
Samayam Tamil paytm


உங்களது மொபைல் போனில் உள்ள பேடிஎம் செயலியின் மூலமாக அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே நீங்கள் ஆண்டின் 365 நாட்களும் எந்த நேரத்திலும் வெறும் 2 நிமிடங்களில் கடன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் நீங்கள் 2 லட்சம் ரூபாய் வரையில் உடனடி கடன் பெற முடியும். உங்களது கிரெடிட் ஸ்கோர் மற்றும் திருப்பும் செலுத்தும் வசதியைப் பொறுத்து உங்களுக்கு இதில் கடன் வழங்கப்படும். நீங்கள் இதில் வாங்கும் கடனை 18 முதல் 36 மாத ஈஎம்ஐ மூலமாகத் திருப்பிச் செலுத்தலாம்.

பிஎஃப் பணத்தை எடுக்கணும்னா இதெல்லாம் தெரியணும்!

இச்சேவையின் மூலமாக, இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 10 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்க்க பேடிஎம் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 2021 மார்ச் மாத நிறைவுக்குள் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி கடனை பேடிஎம் நிறுவனம் வழங்கவுள்ளது. இது தவிர, சிறு குறு நிறுவனங்களுக்கு பேடிஎம் நிதியுதவியும் வழங்குகிறது. ‘Merchant Leading Program’ என்ற திட்டத்தின் கீழ் பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது.

வருமான வரி: இதைச் செய்யாவிட்டால் அபராதம்!

சிறு குறு நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பேடிஎம் நிறுவனம் தனது கடன் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் எங்களது வாடிக்கையாளர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்த முடியும் எனவும், டிஜிட்டல் பிரிவில் மேம்படலாம் எனவும் பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்