ஆப்நகரம்

சிலிண்டர் மானியம் - ஆதாரை இணைக்கலயா? பணம் கிடைக்காது!

சமையல் சிலிண்டருக்கு மானிய உதவி பெற ஆதார் கட்டாயம். அதை இணைப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்...

Samayam Tamil 12 Jan 2022, 2:14 pm
மத்திய அரசிடமிருந்து ஏழை எளிய மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் வாங்குவதற்கு அதற்கான பணத்தைக் கொடுத்தே வாங்க வேண்டும். சிலிண்டர் விலை இப்போது 1000 ரூபாயை நெருங்கிவிட்டது. எனவே நிறையப் பேருக்கு ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் வாங்குவது சிக்கலான ஒன்றாக இருக்கிறது. இந்த சிரமத்தை குறைப்பதற்காக அரசு தரப்பிலிருந்து மானியம் வழங்கப்படுகிறது.
Samayam Tamil cylinder


சமையல் சிலிண்டருக்கு மானியம் பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. உங்களுடைய ஆதார் கார்டை சிலிண்டர் கணக்குடன் இணைத்தால் மட்டுமே மானியம் கிடைக்கும். அதற்கு முன்னர் ஆதார் கார்டு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல, சிலிண்டருக்கான மானியப் பணம் வருவதற்கு அந்த வங்கிக் கணக்கை சிலிண்டர் கணக்குடன் இணைக்க வேண்டும். ஆதார் கார்டை இணைக்காதவர்களுக்கு மானிய உதவி கிடைக்காது.

சிலிண்டர் புக் பண்ணணுமா? இந்த நம்பருக்கு கூப்பிடுங்க!

ஆதார் கார்டை இணைப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன.

நேரடியாகச் சென்று இணைப்பதற்கு பாரத் கேஸ், இண்டேன், ஹெச்.பி. கேஸ் ஆகிய சிலிண்டர் விநியோகஸ்தர்களின் வெப்சைட்டில் சென்று மானியத்துக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அருகில் உள்ள சிலிண்டர் ஏஜென்சியில் கொடுக்க வேண்டும். நீங்கள் எந்த நிறுவனத்திடம் சிலிண்டர் வாங்குகிறீர்களோ அதன் வெப்சைட்டிலேயே விண்ணப்பம் கிடைக்கும்.

போன் கால் மூலமாக இணைப்பதற்கு 18000-2333-555 என்ற நம்பருக்கு கால் செய்து உங்களுடைய ஆதார் மற்றும் சிலிண்டர் விவரங்களை வழங்கி இணைக்கலாம்.

SMS மூலமாகவும் இணைக்கலாம். சிலிண்டர் இணைப்புடன் பதிவுசெய்யப்பட்ட மொபல் நம்பரிலிருந்து சிலிண்டர் விநியோகஸ்தருக்கு SMS அனுப்பி ஆதாரை இணைக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்