ஆப்நகரம்

உங்க எஸ்பிஐ அக்கவுண்ட் குளோஸ் ஆகாம இருக்கணும்னா இதை உடனே பண்ணுங்க!

கேஒய்சி பூர்த்தி செய்யாத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி அறிவித்துள்ளது.

Samayam Tamil 27 Feb 2020, 6:30 pm
  1. நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கணக்கரா?
    Samayam Tamil உங்க கிட்ட எஸ்பிஐ அக்கவுண்ட் இருக்கா உடனே இத பண்ணலான அக்கவுண்ட் இருக்காது

    இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, KYC எனப்படும் வாடிக்கையாளர் சரிபார்ப்பு சேவை விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத வங்கிக் கணக்குகள் பிப்ரவரி 28ஆம் தேதிக்குப் பிறகு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. கேஒய்சி என்றால் என்ன?
    உங்களது வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுதல் என்பதன் சுருக்கமே கேஒய்சி (KYC - know your customer) என்று அழைக்கப்படுகிறது. வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மத்திய ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கும் வரையறைகளே இந்த கேஒய்சி என்பதாகும்.
  3. இதனால் வங்கிகளுக்கு என்ன பயன்?
    வங்கிக் கணக்கின் உண்மையான உரிமையாளர் யார்? அந்த வங்கிக் கணக்குக்கு எங்கிருந்து பணம் வருகிறது? கணக்கு உரிமையாளரின் உண்மையான தொழில் என்ன? அவர் மேற்கொள்ளும் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான உண்மையான காரணங்கள் என்ன போன்றவற்றை அறிந்துகொள்ள இந்த கேஒய்சி வழிகாட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் மூலம் வங்கிக்கு ஏதாவது பிரச்சனை வந்தால், அதற்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த கேஒய்சி உதவுகிறது.
  4. கேஒய்சி பூர்த்தி செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?
    * வாக்காளர் அடையாள அட்டை *பாஸ்போர்ட் * ஓட்டுநர் உரிமம் * 100 நாள் வேலைத் திட்ட அட்டையாள அட்டை * இந்தியா போஸ்ட் அடையாள அட்டை * ஓய்வூதிய அட்டை * ரேஷன் அட்டை * வங்கிக் கணக்குப் புத்தகம் * மின்சார இணைப்பு அட்டை * ஆதார் அட்டை * பான் கார்டு * கிரய/குத்தகை ஒப்பந்தப் பத்திரம்
  5. கேஒய்சி நிறைவு செய்யாவிட்டால் என்ன ஆகும்?
    பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கேஒய்சி பூர்த்தி செய்து முடிக்காவிட்டால் அதன் பின்னர் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவித்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி ஒரு வங்கி தனது வாடிக்கையாளரின் கேஒய்சி தகவல்களை அப்டேட் செய்யாவிட்டா அந்த வங்கிகு அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்த விசயத்தில் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களிடம் கடுமையாகச் செயல்படவேண்டியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்