ஆப்நகரம்

உங்களது சம்பளம் குறையப் போகுது! ஷாக்கிங் நியூஸ்!!

ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வருவதால் வாங்கும் சம்பளத்தின் அளவு குறையவிருக்கிறது.

Samayam Tamil 23 Jan 2021, 5:44 pm
மத்திய அரசின் உத்தரவுப்படி, வருகிற ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வருகிறது. இது தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விதி அமலுக்கு வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான ஊதியப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும். இதனால் ஊழியர்கள் கையில் வாங்கும் (take home salary) சம்பளத்தின் அளவு குறையும்.
Samayam Tamil salary


புதிய விதியின்படி, ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி (gratuity), பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் (Allowance) மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. 2021 ஏப்ரல் முதல் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை சம்பளத்தை வைத்திருக்க வேண்டும். புதிய விதியின் கீழ் கிராஜுவிட்டியின் அளவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அடிப்படை சம்பளத்தின்படித்தான் கிராஜுவிட்டி கணக்கிடப்படுகிறது.

அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் கிராஜுவிட்டியின் அளவும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கிராஜுவிசுட்டி தவிர நிறுவனம் மற்றும் ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பும் இனி அதிகரிக்கும். இது நீண்ட காலத்திற்கு ஊழியர்களின் சேமிப்பையும் அதிகரிக்கும் என்பதால் இது ஒரு தரப்பினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிய விதியின்படி, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் நீங்கள் வாங்கும் சம்பளம் குறைந்தாலும் நீண்ட கால அடிப்படையில் உங்களுக்குப் பெரிய தொகை கிடைக்கும். இருப்பினும் கையில் வாங்கும் மாதச் சம்பளம் குறைந்தால் நெருக்கடி ஏற்படும் என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்