ஆப்நகரம்

உங்க ரயில் டிக்கெட்டில் வேற ஆள் போகலாம்.. இப்படி ஒரு வசதி இருக்கு தெரியுமா!

உங்களுடைய ரயில் டிக்கெட்டில் வேறு ஒருவர் பயணிக்கும் வசதி உள்ளது. அதுபற்றிய முழு விவரம் இதோ..

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 1 May 2023, 2:20 pm
இந்திய ரயில்வே நீண்டதூரப் பயணங்களுக்கு மிகவும் சௌகரியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. ரயில்களில் பயணம் செய்வது மிகவும் வசதியாக இருப்பதோடு, டிக்கெட் செலவும் குறைவுதான். எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.
Samayam Tamil train


ரயிலில் டிக்கெட் எடுப்பதில் சில நேரங்களில் சிரமம் ஏற்படுகிறது. சிலர் முன்கூட்டியே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதால் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். டிக்கெட் புக்கிங் செய்த பிறகு திடீரென்று சில காரணங்களால் அவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்கிறார்கள்.

உண்மையில் ஒருவருடைய ரயில் பயணம் ரத்தானால் அவரது குடும்பத்தில் உள்ள வேறு ஒருவர் அந்த டிக்கெட்டில் பயணம் செய்யலாம். ஆனால் இது நிறையப் பேருக்கு தெரியாது. அந்த சலுகையைப் பெறுவதற்கு சில முக்கியமான விதிகளை பின்பற்ற வேண்டும்.

உங்களுடைய ரயில் டிக்கெட் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு, சில காரணங்களால் பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தால், உங்கள் குடும்பத்தில் உள்ள எவரும் உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம். இதற்கு 48 மணி நேரத்திற்கு முன் அருகிலுள்ள ரயில் நிலையத்தின் ரயில்வே கவுண்டருக்குச் சென்று உங்கள் டிக்கெட்டை மற்றொரு உறுப்பினரின் பெயரில் மாற்ற வேண்டும்.

கவுண்டருக்குச் சென்று இதற்கான படிவத்தை நிரப்புவதன் மூலம், உங்கள் டிக்கெட்டில் வேறு ஒருவரை நீங்கள் பயணிக்க அனுமதிக்கிறீர்கள் என்பதை ரயில்வேக்கு தெரிவிக்க வேண்டும். டிக்கெட்டை மாற்றும் போது யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்படுகிறதோ அந்த நபரின் ஆதார் அட்டையையும் கொடுக்க வேண்டும்.

இந்த ஆதார் அட்டை அடையாளச் சான்று போல் செயல்படுகிறது. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்பட்டுள்ளதோ அவர் ரயிலில் பயணம் செய்யலாம்.

ரயில் டிக்கெட் புக்கிங் செய்த பிறகு சில நேரங்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில் டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். அதற்கான டிக்கெட் பணமும் கிடைக்காமல் போகலாம். வேறு ஒருவருக்கு டிக்கெட் புக்கிங் செய்தாலும் உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட் கிடைப்பது கடினம். அதனால்தான் ரயில் பயணிகளுக்கு இந்த வசதியை ரயில்வே துறை வழங்குகிறது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்