ஆப்நகரம்

இனி ஆர்டர் பண்ண முடியாது... ஜொமாட்டோ அதிரடி அறிவிப்பு!

மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் சேவையை நிறுத்துவதாக ஜொமாட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 13 Sep 2021, 3:24 pm
அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவது, ஆன்லைன் ஷாப்பிங் என்ற கலாச்சாரம் இந்தியர்களிடையே தீவிரமடைந்துள்ளது. உணவுப் பொருட்கள், மளிகை சாமான்களைக் கூட இப்போது அதிகப்பேர் ஆர்டர் செய்துதான் வாங்குகின்றனர். ஜொமாட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களிடேயே இத்துறையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்ப்பதற்காக பல்வேறு சேவைகளையும் வசதிகளையும் இந்நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றனர்.
Samayam Tamil zomato


சென்ற ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் சேவையை ஜொமாட்டோ நிறுவனம் விரிவுபடுத்தியது. அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. ஆனால் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் இச்சேவை மந்தமாகியுள்ளது. எனவே மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் சேவையை நிறுத்த ஜொமாட்டோ முடிவுசெய்துள்ளது. உணவு டெலிவரியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்க ஜொமாட்டோ திட்டமிட்டுள்ளது.

Gold rate: தங்கம் விலை சரிவு... மக்கள் மகிழ்ச்சி!!

செப்டம்பர் 17ஆம் தேதி முதல் மளிகை சாமான் டெலிவரி சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் யாரும் ஜொமாட்டோ ஆப்பில் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்து வாங்க முடியாது. மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவதற்காகவே பிக் பாஸ்கெட் உள்ளிட்ட நிறைய நிறுவனங்கள் உள்ளன. அவை அதிக முதலீடு செய்து தங்களது தொழிலை இந்தியாவில் விரிவுபடுத்தி வருகின்றன. ஆனால், ஸ்விகி, ஜொமாட்டோ போன்ற நிறுவனங்கள் உணவு டெலிவரியில் அதிகக் கவனம் செலுத்துவதால் மளிகைப் பொருட்கள் பிரிவில் பெரிய அளவில் வெற்றிபெறமுடியவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்