ஆப்நகரம்

5,000 பேருக்கு வேலை கொடுக்கும் உணவுப் பூங்கா!

விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மாபெரும் உணவுப் பூங்கா மிசோரம் மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Jul 2020, 6:28 pm
மிசோரம் மாநிலத்தில் உள்ள கோலாசிப் என்ற இடத்தில் சோராம் மெகா புட் பார்க் லிமிடெட் என்ற மாபெரும் உணவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவுப் பூங்காவை மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் காணொளிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். ரூ.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த உணவுப் பூங்காவானது 55 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா மூலமாக 25,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பயனளிக்கும் எனவும், அப்பகுதியில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil mega park


மெகா உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மெகா உணவுப் பூங்காவுக்கும் ரூ.50 கோடி நிதியுதவி அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 18 மெகா உணவுப் பூங்கா திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும், 19 மெகா உணவுப் பூங்காக்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் 6 பூங்காக்கள் வடகிழக்குப் பிராந்தியத்தில் இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை மொத்தம் 88 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 41 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹர்சிம்ரத் கவுல் பாதல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு நன்றி சொல்லும் மசாலா துறை... காரணம் இதுதான்!

அவர் மேலும் பேசுகையில், “இப்பூங்காவின் தொடக்கம் இந்தப் பகுதியின் புதிய விடியலாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியாவுக்கான கனவைப் பூர்த்தி செய்வதில் இது பெரிய அளவில் பங்காற்றும். இந்தப் பிராந்தியத்தில் உள்ள 3 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலும், 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையிலும் மிசோராமில் 7 திட்டங்கள் உட்பட ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதியிலும் ரூ 1,000 கோடி மதிப்பில் 88 திட்டங்கள் கடந்த ஆறு வருடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறினார்.

பங்குச் சந்தையில் எண்ட்ரி கொடுக்கும் பாலிசி பஜார்

தற்போது திறக்கப்பட்டுள்ள உணவுப் பூங்காவில் உள்ள 30 உணவு பதப்படுத்தும் பிரிவுகளில் கூடுதலாக ரூ.250 கோடி முதலீடு செய்தால் ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வரையில் விற்பனை அதிகரிக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்