ஆப்நகரம்

இந்தியாவில் கிரிப்டோகரன்சி பேரில் ரூ.2 கோடி மோசடி!

பெங்களூருவில் ரூ.2 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சி பெயரில் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை.

Samayam Tamil 20 Jan 2022, 6:59 pm
இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் கிரிப்டோகரன்சியின் வளார்ச்சியைத் தொடர்ந்து, கிரிப்டோ தொடர்பான மோசடிகளும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பெங்களூருவில் கிரிப்டோகரன்சி பேரில் ரூ. 2 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.
Samayam Tamil crypto scam


பெங்களூரு ஜெயநகர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தன்ராஜ் என்பவர், தனக்கு அறிமுகமான சந்தோஷ் டிஎஸ் என்பவர் கிரிப்டோகரன்சியில் அதிகமான பணம் சம்பாதித்து தருவதாகக் கூறி 2 கோடி பணம் வாங்கி, திருப்பித் தராமல் தன்னை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் போலீசில் புகாரும் அளித்துள்ளார். இந்த வழக்கில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட நபரான தன்ராஜ் மற்றும் ஏமாற்றியதாகக் கூறப்படும் சந்தோஷ் என்பரும் 2014 ஆண்டு முதல் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்றும் சந்தோஷ் கிரிப்டோகரன்சி உட்பட பல முதலீடுகளில் முதலீடு செய்தால் இலாபத்தை சரிசமாகக் பிரித்துக் கொள்ளலாம் எனக் கூறி தன்ராஜிடமிருந்து ரூபாய் 2.25 கோடி ஆன்லைன் மூலம் பணம் வாங்கியதாகவும், பல மாதங்களாகி பணத்தை கேட்டும் திருப்பித் தராததால் போலிஸில் புகார் அளித்துள்ளார் எனவும் அதனைத் தொடர்ந்து ஜெயநகர் போலிசார் சந்தோஷ் மீது மோசடி வழக்கு தொடுத்துள்ளதாகவும் போலிஸ் தரப்பில் கூறுகின்றனர்.

Cryptocurrency: நிஞ்ஜா ப்ளோக்கி காயின் தொடர்ந்து ஆதிக்கம்!
கடந்த வருடம் 2021இல் இதே பெங்களூரில் 10 இலட்சம் ரூபாய் வரை கிரிப்டோ மோசடியில் ஒருவர் பணத்தை இழந்த வழக்கும் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு வருடமாகவே கிரிப்டோகரன்சி பெயரில் பல கோடிகளில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்