ஆப்நகரம்

ரூ. 340 கோடி டாலர் கிரிப்டோ மோசடி!! அமரிக்காவில் இந்தியர் கைது!!

பான்சீ ஸ்கீம் மூலம் சுமார் 340 கோடி டாலர் வரை மோசடி செய்துள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 28 Feb 2022, 4:23 pm
கிரிப்டோகரன்சி முதலீட்டு தளமான பிட்கனெக்ட்டின் (BitConnect) நிறுவனர், மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சதீஷ் கும்பானி என்பவர் சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை பான்சீ ஸ்கீம் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து ஏமாற்றி பெற்றதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil CRypto



சதீஷ் கும்பானி குஜராத் மாநிலம் ஹேமலைச் சேர்ந்தவர் என அமெரிக்க நீதிமனற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பிட்கனெக்ட் தளம் வழியாக முதலீட்டாளர்களுக்கு பிட்காயினில் கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் அவர்களை தவறாக வழிநடத்தியதாகக் கூறி இந்த மோசடியில் சதீஷ் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என கலிபோர்னியாவின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் ராண்டி கிராஸ்மேன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.

பண மோசடி மற்றும் விலை கையாளுதல், உரிமம் பெறாத பணத்தை கடத்தும் வணிகத்தை நடத்துதல் மற்றும் சர்வதேச பணமோசடிக்கு சதி செய்தல் போன்றவற்றின் கீழ் கும்பனி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் அதிகபட்சமாக 70 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்வார் எனவும் கலிபோர்னிய நீதிமன்ற அறிக்கைகள் கூறுகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்