ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்:
ஆசியாசின் நம்பர் 1 பணக்காரர் என்றாலே அனைவரின் கண்முன் வந்து நிற்பவர் நம்ம ஊர்க்காரரான முகேஷ் அம்பானிதான். அவர் இடத்தை பிடிப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
புது நம்பர் 1 பணக்காரரின் சொத்து மதிப்பு:
அவரின் சொத்து மதிப்பைக் கேட்டால் தலையே சுத்திவிடும் அளவிற்கு உள்ளது. ப்ளூம்பெர்க் இண்டெக்ஸ் தரவுகளின்படி அதிக சொத்து மதிப்பை வைத்திருப்பவர்கள் குறித்து முதல் முறையாக ஒரு ஆராய்ச்சியை நடத்தியது அதில் செங்பெங் ஜாவோவின் சொத்து மதிப்பானது உலகின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்தைவிட இருமடங்கு உள்ளதாகக் கூறியுள்ளது.
ஓவர் நைட்டில் முகேஷ் அம்பானியை ஓரம் கட்டியவர்:
ஆனால் அவரையே ஓவர் நைட்டில் ஒருவர் ஓரங்கட்டியுள்ளார். முன்னாள் மெக்டொனால்ஸின் ஊழியரும், மென்பொருள் தயாரிப்பாளரும் மற்றும் உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிமாற்றத்தளமான பைனான்ஸ் (Binance) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான (CEO) செங்பெங் ஜாவோ (Changpeng Zhao) ஒரே இரவில் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
பைனான்ஸின் வீழ்ச்சியும் – வளர்ச்சியும்:
சீனாவிலிருந்து ஒதுக்கப்பட்ட பைனான்ஸ் சென்ற வருடம் பல சட்டச் சிக்கல்களையும் சந்தித்தது. பாகிஸ்தானாலும் பைனான்ஸ் நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் செங்பெங் ஜாவோ சற்றும் தளராமல் அவரின் விடாப்பிடியான முயற்சிகளால் தடைகளை உடைத்து ஆஸ்திரேலியா, அமெரிக்கப் பிரதேசங்கள் மற்றும் சிங்கப்பூர், அரபு நாடுகளிலும் அதன் வர்த்தகத்தைச் செயல்படுத்து உரிமையை மேற்சொன்ன நாடுகளில் ஆறே மாதங்களில் வர்த்தக உரிமத்தை வாங்கி அதிவேகமாக உயர்ந்து வருகிறது.
அதன் வளர்ச்சியைத் தொடர்ந்து அதன் தலைமை செயல் அதிகாரியின் சொத்தும் உயர்ந்து கொண்டே வந்துள்ளது. அதன் விளைவாக செங்பெங் ஜாவோ இன்று முகேஷ் அம்பானியின் நம்பர் 1 பணக்காரர் இடத்திலிருந்து நகர்த்தி அப்பட்டியலில் அவரின் பெயரை இடம் பெறவும் செய்துள்ளது.
பைனான்ஸ் சிஇஓ செங்பெங் ஜாவோ:
ப்ளூம்பெர்க் இண்டெக்ஸ் தரவுகளின்படி செங்பெங் ஜாவோவின் சொத்து மதிப்பானது 96 பில்லியின் டாலர்களாக உள்ளது. மேலும் தொழில்நுட்ப டைக்கூன்களான கூகுள் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் மற்றும் மெட்ட ஃபேஸ்புக் நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோருக்கும் போட்டியாக உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.