ஆப்நகரம்

கிரிப்டோகரன்சி: அடேங்கப்பா.. 700 கோடிக்கு மேல் மோசடி!

700 கோடிக்கு மேல் கிரிப்டோ மோசடியில் சிக்கிய பினான்ஸ்... வெளியான அதிர்ச்சி தகவல்!

Samayam Tamil 13 Jan 2022, 8:07 pm
பிரபல கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான பினான்ஸ் 739 கோடி அளவுக்கு கிரிப்டோ மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் FIA அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் ஃபெடரல் விசாரணை நிறுவனம் (The federal investigation agency -FIA) பிரபல கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான பினான்ஸ், மக்களிடம் ரூ.739 கோடி அளவில் கிரிப்டோ மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Samayam Tamil binance


கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில், பரிச்சயமில்லாத மூன்றாம் தரப்பு வாலட்டுகளுக்கு பணத்தை மாற்றுமாறு கிரிப்டோ பயனாளர்களை அறிவுறுத்தியதாகவும், அதில் பணப் பரிமாற்றம் செய்தவர்கள் புகார் அளித்ததன் பெயரில் பாகிஸ்தான் FIA பினான்ஸ் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பினான்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளரும், வளர்ச்சி ஆய்வாளருமான ஹம்சா கானுக்கு ”மோசமான ஆன்லைன் முதலீட்டு மொபைல் பயன்பாடுகள்” குறித்து அந்நிறுவனத்தின் சங்க உறுப்பினர்கள் உடனடியாக விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தான் FIA அதிகாரிகள் கேட்டுள்ளனர் என்று பாகிஸ்தானின் டான் நியூஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

பிட்காயினில்தான் இனி சம்பளம்: மாஸ் காட்டும் கூடைப்பந்து வீரர்கள்!
முதற்கட்ட விசாரணையில், பயனர்களின் நிதியை சட்டவிரோதமாகச் சேகரித்த 11 மோசடி செயலிகளை பாகிஸ்தான் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இந்தப் பயன்பாடுகளின் பெயர்கள் சீரற்ற சுருக்கங்களாக இருக்கும், அவை எதையாவது குறிக்கலாம் அல்லது அர்த்தப்படுத்தாமல் இருக்கலாம். அதில் சில HFC, MCX, HTFOX மற்றும் AVG86C போன்றவையாகும்.

மோசடி செய்பவர்கள் முதலீட்டாளர்களை "எக்ஸ்பர்ட்ஸ் பெட்டிங் சிக்னல்" எனும் டெலிகிராம் சேனல்களில் சேரும்படி தூண்டியுள்ளனர். பின்னர் தீங்கிழைக்கும் இந்த டெலிகிராம் சேனல்கள் ஒவ்வொன்றும் தலா 5000 நபர்களை வழிநடத்தி வருவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்