ஆப்நகரம்

"பிரில்லியன்ட்" முடிவு.. ஸ்கெட்ச் போட்டு இந்தியரைத் தூக்கிய பினான்ஸ்!!

பினான்ஸின் சட்டக் குழுவின் தலைவராகவும், விபி ஆகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் வழக்கறிஞர் ஒருவரை நியமித்துள்ளது.

Samayam Tamil 24 May 2022, 2:02 pm
பினான்ஸ் அமெரிக்கா அதன் சட்டக் குழுவின் தலைவராகவும் (legal team), புதிய தலைவராகவும் (vice president) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணா ஜுவ்வாடி (Krishna Juvvadi ) என்பவரை நியமித்துள்ளது.
Samayam Tamil WhatsApp Image 2022-05-24 at 1.07.31 PM.


பினான்ஸ் அமெரிக்காவின் புதிய சட்டக் குழுத் தலைவரான கிருஷ்ணா ஜுவ்வாடி இதற்கு முன் அமெரிக்க நீதித்துறையில் (DoJ) விசாரணை வழக்கறிஞராகவும், Uber இல் செயல்பாட்டு இணக்கத்தின் உலகளாவிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

பைனான்ஸ் நிறுவனம் மே 19 அன்று தனது சட்டக் குழுவின் தலைவராக ஜுவ்வாடியை அறிமுகப்படுத்தியதை அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக பினான்ஸ் நிறுவனம் முடிந்தவரைப் பல நாடுகளில் அதன் செயல்பாட்டு உரிமங்களைப் பெறுவதைத் தனது இலக்காகக் கொண்டுள்ளது. இது உலகின் மிகவும் உரிமம் பெற்ற கிரிப்டோ பரிமாற்ற நிறுவனமாகவும் திகழ்கிறது.

இந்தியர்கள் அதிக திறமை வாய்ந்தவர்கள் என்பதாலும், சிக்கல்களை தீர்ப்பதிலும் வல்லவர்கள் என்பதால் கிருஷ்ணா அவர்களைத் தகுதியான இடத்தில் நாங்கள் எடுத்துள்ளோம் என்றும் பினான்ஸின் சிஇஓவான செங்பெங் ஜாவோ கூறியுள்ளார்.

பினான்ஸ் நிறுவனம் உலகின் பல்வேறு பகுதிகளில் அதன் சட்டக் குழுக்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது, அதன் செயல்பாடுகள் அந்நாட்டின் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த முடிவினை அடுத்து கிருஷ்ணா அவர்களை அதன் சட்டக்குழு தலைவராக நியமித்துப் பாதுகாப்பான சட்டங்களை உருவாக்கப் போவதாகவும் செங்பெங் ஜாவோ கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்