ஆப்நகரம்

IPO: கிரிப்டோகரன்சி துறையின் முதல் ஐபிஓ.. இதில் என்ன ஸ்பெஷல்?

பிட்காயின் மைனிங் நிறுவனமான ரோடியம் கிரிப்டோகரன்சி துறையில் முதன் முதலாக 7 மில்லியனுக்கும் அதிகமான பங்குகளை ஐபிஓ மூலம் வெளியிட உள்ளது.

Samayam Tamil 21 Jan 2022, 7:01 pm
அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த பிரபல பிட்காயின் மைனிங் நிறுவனமான ரோடியம் எண்டர்பிரைசஸ் (Rhodium Enterprises) கிரிப்டோகரன்சி வர்த்தக துறையில் முதல்முறையாக IPO (initial public offering) மூலம் பங்குகளை வெளியிட உள்ளது.
Samayam Tamil ஐபிஓ


IPO என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளை முதன் முறையாக பொது விநியோக முறையில் வழங்குவதாகும். ஐபிஓவில் ரோடியம் நிறுவனத்தின் பங்கு விலை 12 முதல் 14 டாலர் என நிர்ணயம் செய்து சுமார் 7.69 மில்லியன் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த IPO மூலம் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களுக்காக 100 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது. ரோடியம் பிட்காயின் மைனிங்கை தனியுரிம தொழில்நுட்பம் மற்றும் திரவ குளிரூட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிட்காயினை சொந்தமாக உருவாக்குகிறது.

கிரிப்டோகரன்சியில் கைவரிசை.. ரூ.110 கோடி அபேஸ்!!
ரோடியம் நிறுவனம் இந்த செயல்முறையை செலவு குறைந்ததாகவும் நிலையானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்