ஆப்நகரம்

40 கோடி டாலர் கிரிப்டோகரன்சி காலி.. மோசடியில் ஈடுபட்ட ஹேக்கர்கள்!

2021 இல் வட கொரிய ஹேக்கர்கள் சுமார் 40 கோடி டாலருக்கு மேல் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 16 Jan 2022, 5:17 pm
பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனமான செயினலிசிஸ் (Chainalysis) 2021 ஆம் ஆண்டு கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் குற்றவாளிகளுக்கு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக இருந்தது எனக் கூறியுள்ளது.
Samayam Tamil Crypto hacks


“2020 முதல் 2021 வரை, வட கொரிய-இணைக்கப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஏழாக உயர்ந்ததுள்ளது, மேலும் தற்சமயம் இந்த மோசடிகளின் மதிப்பு 40% அதிகரித்துள்ளது" என்று செயினலிசிஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த கிரிப்டோ ஹேக்கர்கள் கிரிப்டோகரன்சி முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் செண்ட்ரலைஸ்ட் பரிமாற்ற தளங்களை குறிவைத்து கிரிப்டோ சொத்துக்களை திருடுகின்றனர் எனவும் கூறியுள்ளது. ஆனால் வட கொரிய அரசு கிரிப்டோகரன்சி ஹேக்குகளில் ஈடுபடுவதாக வரும் செய்திகளை தொடர்ந்து மறுத்து வருகிறது.

கிரிப்டோகரன்சிக்கு பச்சைக்கொடி காட்டிய அடுத்த நாடு!
ஹேக்கர்கள் கவர்ச்சியான மின்னஞ்சல்கள், குறியீடு சுரண்டல்கள் மற்றும் மால்வேர் உள்ளிட்ட பல நுட்பங்களைப் பயன்படுத்தி, நிறுவனங்களின் "ஹாட்" வாலட்களில் இருந்து நிதியைப் பெற்று, பின்னர் அவற்றை வட கொரியாவின் கட்டுப்பாட்டு முகவரிகளுக்கு மாற்றியுள்ளனர் என்று செயினலிசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இம்மாதிரியான கிரிப்டோ ஹேக்குகளிலிருந்து தப்பிக்க கிரிப்டோகரன்சி பயனாளர்கள் தங்களின் ”கோல்ட் வாலட்டுகளில்” உள்ள கிரிப்டோ முதலீடுகளை “ஹாட் வாலட்டுகளுக்கு” மாற்றி வைக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்